
புனிதமிகு மிஃராஜ் இரவு
இஸ்லாமியர்களின் புனிதமிகு மிஃராஜ், பரா அத் இரவுகளில் இன்று மிஃராஜ் இரவு கடைப்பிடிக்கப்படுகிறது. மிஃராஜ் இரவு என்பது மாநபி (ஸல்) அவர்கள், இறைத்தூதர் ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் சென்று அல்லாஹ்வை சந்தித்து, தொழுகை முறையை கற்று வந்து நமக்காக தந்த நாள் ஆகும்.
இந்த் அற்புதப் பயணமானது இரண்டு இடம் சம்பதமானது. மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பாலஸ்தீனத்துக்கும், மஸ்ஜிதுல் அக்ஸா வரையீலும், அங்கிருந்து அல்லாஹ்வின் அர்ஷ் வரையிலும் சென்று வந்ததாகும்.
மக்காவிலிருந்து, பாலஸ்தீனத்துக்கு நபியவர்கள் காலத்தில் சென்று வரவே 2 மாதங்கள் பிடிக்கும். அல்லாஹ்வின் அர்ஷை அறிந்தவர் மாநபியைத் தவிர யாருமில்லையே. ஆனாலும் இந்த நிகழ்வுகள் ஒரு மைக்ரோ செகண்ட் எனப்படும் நேரத்திற்குள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முகமது அவர்களின் 53ம் வயதில் நபித்துவம் பட்டம் பெற்று 13ஆண்டுகள் நிறைவு பெற்ற பின் நடந்த சம்பவமாகும் இது.
அபூதாலிப் அவர்களின் மகளார் உம்முஹானி அவர்களின் வீட்டில் நித்திரையில் இருந்த முகமது நபியை இருவானவர்கள் வந்து அழைத்துச் சென்றனர். அவர் நபியை மஸ்ஜிதுல் அக்சாவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்துதான் அல்லாஹ்வை காண்பதற்கான விண்ணேற்றப் பயணம் நடைபெற்றது. அப்போது நபிகள் 7வானங்களைத் தாண்டிச் சென்றார். அவருடன் இருந்த இறைத்தூதர் ஜிப்ரயில்(அலை) அவர்கள் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடத்தைக் கடக்கும்போது நபிகளின் கரம்பற்றி அவரை மட்டும் தனியே விட்டார். அங்கிருந்த நபிகள் அல்லாஹ்வின் அர்ஷை சென்றடைந்தார். படைத்தோனைப் பார்க்கும் பெரும் பேறு நிகழ்ந்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
அங்குதான் வணக்க முறைகள் நபிகளுக்கு கற்பிக்கப்பட்டது. அதுவும் ஒரு நாளைக்கு 50வேளை தொழுகை செய்ய டும் என்று முதலில் வல்ல நாயன் கூறினான். அதை ஏற்றுக்கொண்டு திரும்பும் போது, ஆதம் (அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடம் சென்று கேட்டு தொழுகை வேளையை ஐவேளையாக மாற்றி வந்தார்கள்.
அன்றிலிருந்து நபிகள் தொழுகையை முறையாக தன் சஹாபாக்களுக்கு கற்றுத் தந்து, வழிவழியாக நாமும் பின்பற்றி வருகிறோம்.
தொழுகை நம்மை வந்தடையக் காரணமான மிஃராஜ் இரவில் உளத்தூய்மையுடனும், நம்பிக்கையுடனும் வல்ல நாயனை தொழுது வந்தால், நமது வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லாஹ்வின் அருள் நமக்கும் கிடைக்கும்.
இந்த இரவில் அதிகமதிகம் தொழுது நல்ல அமல்களை புரிவோம். இந்த இரவில் மட்டும் அல்லாது இனிவரும் நாட்களிலும் இன்ஷா அல்லாஹ் ஐவேலை தொழுகையையும் நாம் தொழ இறைவன் அருள்பாலிப்பானாக! ஆமீன்.
1 கருத்து:
Assalaamu alaikum wa rahmathullahi wa barakaathuhu,
dear
Not Adam (pbuh), it is prophet moosa (pbuh)said to prophet muhammad (pbuh) to request Allah to reduce down, and it was derived to 5 by approaching Allah by multiple times,
Jazakkallah Khairan
brother in Islam
Abu Nasiha
கருத்துரையிடுக