வெள்ளி, நவம்பர் 26, 2010

பாருங்க பஸ்ஸுக்காரங்களே!

எல்லோருக்கும் வணக்கமுங்க! ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரமுடியலிங்க... இப்ப ஒரு கருத்து சொல்லலாமுன்னு (ஏலேய் மொக்க முனுசாமிமிமிமிமிமின்னு நீங்க முறைக்கிறது கேக்குது) வந்தேனுங்க!
25ந்தேதி பஸ்ஸுக்காரங்களுக்கு( போக்குவரத்து ஊழியர்கள்) தேர்தலாம். சங்கம் வச்சி தங்களை காப்பாத்துறதுக்காக அவங்க வச்ச தேர்தல்லாம் ரொம்ப சந்தோஷம்தான். ஆனால் ஓட்டு போட்டதுமே வண்டியை எடுத்துருந்தாங்கன்னா பஸ்ஸுகாரக மாதிரியே வயித்துப்பாட்டுக்காக மெட்ராஸுல தஞ்சமடைஞ்சு வாழ்ந்துட்டிருக்க நம்ம மாதிரிக ஆளுகளுக்கு சந்தோஷமா இருந்துருக்கும். அவுக ஓட்டுப் போட்ட களைப்புல பஸ்சை எடுக்காததால வேலையை முடிச்சி வீட்டுக்கு போக பஸ்ஸ்டாண்டில காத்துக்கிடந்த என்னைய மாதிரி எத்தனை ஜீவன்கள் அல்லாடுனாங்களோ தெரியலை!
பஸ்காரவுகளே... உங்க வேலையை சரியாச் செஞ்சும் பிரச்னை வந்தா உங்களை காப்பாத்துறதுக்காகத்தானே சங்கம் எல்லாம் வச்சிருக்கீங்க. அந்த சங்க தேர்தலுக்காக பயணிகளை டீலுல விட்டா எப்படி...
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கவுன்சிலர் ஒருத்தரோட மகன் ஒரு ஊழியரை அடிச்சுட்டான்னு, எல்லாரும் பஸ்ஸை எடுக்காம மெட்ராஸையே ஸ்தம்பிக்க வச்சீங்க. அப்பவும் எங்களை மாதிரி பயணிங்க ரொம்பவும் கஷ்டப்பட்டோம். அப்புறம் மேலே இருக்குறவுக, கீழே இருக்கிறவுகன்னு எல்லாரும் பேசி பஸ்ஸை எடுக்க வச்சாங்க.
உங்களை அடிச்சவங்க மேல நடவடிக்கை எடுக்கிறதுக்காக நீங்க நடத்துன போராட்டம் ஒரு பக்கம் நியாயம்தான்.
ஆனால், 25-ந்தேதி நடந்துக்கிட்டதுல என்ன நியாயம் இருக்குன்னு நீங்களே நினைச்சுப் பாருங்க. உங்களை எல்லாம் வழிநடத்துற உயர் அதிகாரிகள் என்ன பண்ணிக்கிட்டிருந்தாங்க. உங்களை அடிச்சிட்டாங்கன்னு பஸ்சை எடுக்காம இருந்த உங்களை, 25ந்தேதி பஸ்சை ஏன் எடுக்கலைன்னு எந்த அதிகாரியாவது ஒரு வார்த்தை கேட்டிருப்பாங்களா/ அரசாங்கம் எதுக்கு இருக்குன்னு தெரியலை. உங்களுக்குன்னு ஒரு சங்கம் வச்சிருக்கீங்க. பஸ்சுல போற எங்களுக்கு ஏதாவது சங்கம் இருக்கா... கொஞ்சமாவது மனசாட்சியோட வேலை பாருங்க பஸ்ஸுகாரங்களே...
என்னடா கருத்து கந்தசாமின்னு சொல்லிக்கிட்டு கன்னாபின்னான்னு எழுதிட்டான்னு நெனைக்கலாம். கருத்து சொல்ற அளவுக்கு எல்லாம் நான் இன்னும் பக்குவப்படல. பாதிக்கப்பட்டுக்கிட்டுதானே இருக்கேன். அதான்!
பாருங்க பஸ்ஸுக்காரங்களே!