அண்ணா, குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்கணும்ன்னா காசு கொடுன்னா...
ஒட்டிய உடலோடு, கந்தல் நிறைந்த சேலையைக் கட்டிக்கொண்டு, கசங்கிய மலராய் ஒரு குழந்தையை கையில் வைத்தபடி மதிய வெயிலில், சிக்னலில் நின்று அவள் பிச்சை கேட்ட போது, அந்த காருக்குப் பின்னால் சைக்கிளில் நின்று கொண்டிருந்த என் மனசு கனத்தது।
கார்க்காரரோ அவளை விரட்டாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தார்। என்னைத் தாண்டி, என் பின்னால் நின்ற கார்க்காரனிடம் சென்று பிச்சை கேட்டாள்। நான் என் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து கொடுக்க முயலும் முன் சிக்னல் விழ, அந்தப் பாதையை கடந்து சென்றேன்।
சே... அந்த அம்மாவுக்கு ஐந்து ரூபாயை கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்குள் அதிகரித்திருந்தது। அடுத்த முறை கண்டிப்பாய் சிக்னலில் பார்த்தாள் காசு கொடுக்க வேண்டும்।
என் அம்மாவின் நினைவு வந்தது। அவள் தாயா? இவள் தாயா? என்னைப் பெத்ததும், ஏதோ அனாதை ஆசிரமத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டாள்। ஆனால் இந்தத் தாயோ தன் பிள்ளையை எப்படியும் வளர்க்க வேண்டும் என்று வேகாத வெயிலில் சிக்னலில் பிச்சை எடுத்தாவது காப்பாற்றி வருகிறாள்। கொடுத்த வைத்த குழந்தை...
நினைக்க நினைக்க என் தாய் மீதான கோபம் அதிகரிக்கத்தான் செய்தது।
ஆசிரமத்திலிருந்து வளர்ந்து ஏதோ கொஞ்சம் படித்து, பருவ வயதை அடைந்ததும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து, திண்பதும், தூங்குவதும் அங்கேதான்। ஏதோ மாதச்சம்பளத்தில் நான் வளர்ந்த ஆசிரமத்துக்கும் கொஞ்சம் கொடுத்துத்தான் வந்தேன்।
நினைவுகளோடு அந்த நாள் மூழ்கிப் போனது।
அன்று வாரவிடுமுறை தினம்। பொழுதுபோவதற்காக ஓட்டல் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போனேன்। கருத்த பட்சிகள் என்கிற மலையாள படம்। மம்மூட்டி நடித்தது। மனைவியை இழந்த கணவன் தன் மூன்று பிள்ளைகளுடன் வாழும் யதார்த்த வாழ்க்கைதான் படம்। இதில் ஒரு குழந்தைக்கு பார்வை குறைபாடு। அந்தக்குழந்தை வானத்தை பற்றி, நிலாவைப் பற்றி, நட்சத்திரத்தைப் பற்றி எல்லாம் மம்மூட்டியிடம் கேட்கும்போதெல்லாம், நம்ம குழந்தையாய் இருந்த போது எழுந்த இதுமாதிரியான கேள்விகள் ஆயிரம் இருக்குமே என்று தோன்றியது।
படத்தில் நவ்யா நாயர் சிக்னலில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் கேரக்டரில் நடித்திருப்பார்। அதை பார்த்ததும் நான் சிக்னலில் கண்ட பெண்ணை போலவே தோன்றியது।ஆனால் படத்தில் அதுபோல் ஏமாற்றி பிழைப்பு நடத்துவதாக இருக்கும்। எனக்கு அதில் உடன்பாடு இல்லை। அந்தப் பெண் தன் குழந்தைக்காக எப்படி கஷ்டப்படுகிறார்। படத்தில் நடிப்பு என்கிறார்களே என்று தோன்றியது।
டிர்ர்ர்ர்ர்ர்ரிங்.... சப்தத்தோடு படத்தின் இடைவேளை।
அங்கிருந்த கேண்டினில் நண்பர்களுடன் டீ , சமோஷா சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்। என் அருகில் ஒரு ஆணும், பெண்ணும் நின்று குசுகுசு குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்। கொஞ்சம் கூர்ந்து கவனித்ததில் அந்தப் பெண்.... ஆம் அதே பெண்தான்। சிக்னலில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவள்தான்।
அவர்கள் பேசியதை கேட்ட எனக்கு திக்கென்றது।
இன்னாம்மா இன்னிக்கு தொழிலுக்கு போலீயா...
இல்லயா, தொழிலுக்கு கொண்டுவந்த கொயந்த செத்துப் போச்சு। அடுத்த கொயந்த இன்னும் கெடைக்கல। அதேன்.....
பெத்த குழந்தையை காசுக்காக இந்த மாதிரி பிசாசுகளிடம் கொடுத்த கொலை செஞ்ச தாயை விட, ஆசிரமத்தில் போட்டுவிட்டு சென்ற என் தாய் உண்மையிலேயே தெய்வம்தான்.
சனி, செப்டம்பர் 20, 2008
வியாழன், செப்டம்பர் 11, 2008
'தாக' வேள்வி!
வேகவேகமாய்
மாறிவரும்
நாகரீக
நங்கையரின்
நளினம் எனக்குள்
மோக இச்சையை
மோதச் செய்ய
தேக சாந்தி
வேண்டி
வேசிகளின்
வியர்வை
நெருக்கத்தில்
பின்னிரவில் ஆடிய
காமகளியாட்ட
பெரும்போதையின்
பிடியிலிருந்தே
என்னை நான்
உயிர்ப்பித்த்
ஈர உதடுகளின்
இறுக்கம்
பிரிகையில்
புறத்திலிருந்து
கேட்குது
வார்த்தை...
புள்ளி
ராஜாவுக்கு
எய்ட்ஸ்
வருமா?
மாறிவரும்
நாகரீக
நங்கையரின்
நளினம் எனக்குள்
மோக இச்சையை
மோதச் செய்ய
தேக சாந்தி
வேண்டி
வேசிகளின்
வியர்வை
நெருக்கத்தில்
பின்னிரவில் ஆடிய
காமகளியாட்ட
பெரும்போதையின்
பிடியிலிருந்தே
என்னை நான்
உயிர்ப்பித்த்
ஈர உதடுகளின்
இறுக்கம்
பிரிகையில்
புறத்திலிருந்து
கேட்குது
வார்த்தை...
புள்ளி
ராஜாவுக்கு
எய்ட்ஸ்
வருமா?
புதன், செப்டம்பர் 10, 2008
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
அந்த ஊரின் பரபரப்பான சந்தை அது। அந்தச் சாலையில் செல்வோர்கள் கண்டிப்பாக இந்த இருவரின் கண்களில் இருந்தும் தப்பிக்க முடியாது। ஆம் அவர்கள் அங்குதான் யாசகம் கேட்கும் தங்களின் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்கள்।
அரசியலைப் போல, இந்தத் தொழிலுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை। எந்த விதத்திலாவதுமக்களை ஏமாற்றத் தெரிந்திருந்தால் போதும்।
ஆனாலும் அவர்களிலிருந்து மாறுபட்டவர்கள் இந்த இருயாசகர்களும்। தங்களது உடல் குறைபாடுகளால் அவர்கள் இந்தத் தொழில் செய்து வருகிறார்கள்।
ஆண்டவன் மட்டும் நம்மள நல்லவிதமாக படைத்திருந்தான் என்றால், இது போன்ற யாசகர்களுக்கு நாம் நிறைய செய்வோம் என்பார்கள், எப்போதென்றால் தங்களுக்கு யாராவது யாசகம் தராமல் சென்றால்।
ஆனால் ஆண்டவன் இருக்கத்தானே செய்கிறான்। ஒருநாள் அந்த ஆண்டவன் இவர்கள் முன் வந்தார்। அவரிடமும் யாசகம் கேட்டார்கள்। ஆளுக்கு மூன்று முட்டைகளைக் கொடுத்தார்।
தாங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை நினைத்தபடி இந்த முட்டையை உடைத்தால் அவை கிடைக்கும்।
சொல்லிவிட்டு மறைந்ததால், அவர் கண்டிப்பாய் கடவுள்தான் என்று நம்பினார்கள்। அன்றைய தொழில் முடியும் நேரம் வந்தது।
இந்த முட்டைகளை மறுநாள் உடைப்போம்। அதுவரை யோசிப்போம் என்று கூறிக் கொண்டவர்களாக இருவரும் தங்கள் பகுதிக்கு தனித்தனியே சென்றுவிட்டனர்।
முதலாமவன் சென்ற பாதையில் கண்பார்வையற்ற ஒரு பெண் பூ கட்டி விற்பனை செய்து கொண்டிருந்தாள்। இது அவனைப் பாதித்தது। அவளிடம் சென்று விசாரித்தான்। பார்வையற்ற நீ, ஏன் உழைத்து உண்கிறாய்। யாசகத் தொழிலில் ஈடுபடலாமே என்றான்। என் உழைப்பில் கிடைக்கும் சிறுவருவாயில் எனக்கு பூரண மனநிம்மதி கிடைக்கிறது। அடுத்தவரிடம் யாசகம் பெறுவது என்பது எனது மனசாட்சிக்கு ஒப்பானது அல்ல என்றாள்। அந்தப் பெண்ணின் பேச்சு அவனுக்குள் ஒரு மனமாற்றத்தை ஏறுபடுத்த, உடனே ஒரு முட்டையை எடுத்து , அந்தப் பெண்ணுக்கு கண்பார்வை கிடைக்க வேண்டும்। தானும் நலம்பெற வேண்டும் என்று கூறி உடைத்தான்।
அவ்வாறே நடந்தது। அந்தப் பெண் நன்றிக்கடனாக, அவனையே திருமணம் செய்ய சம்மதித்தாள்। பின்னர் மற்ற இரு முட்டைகளையும், வசதி வாய்ப்பு கோரியும், ஆரோக்கியமான, நிம்மதியான வாழ்க்கை வேண்டியும் உடைக்க அவன் மிகப்பெரும் தனவந்தனான்।
புதுவாழ்வு கிடைத்த மகிழ்வில் தன் பழைய இடத்துக்கு செல்லவில்லை। அதிர்ஷ்டத்தால் கிடைத்த செல்வத்தை பலமடங்கு பெருக்கினான்।
சில ஆண்டுகள் கழித்து, பழைய சந்தைப் பாதைக்கு சென்றான்। அங்கு மற்ற யாசகன் அமர்ந்து யாசகத் தொழில் செய்து கொண்டிருந்தான்।
தனவந்தனை அடையாளம் தெரிந்து கொண்ட யாசகனிடம், முதலாமவன் முட்டை கிடைத்தும் ஏன் இப்படியே இருக்கிறாய் என்று கேட்க, அவன் தன் குமுறலை சொல்லத் தொடங்கினான்।
உன்னிடம் சொல்லிவிட்டு, நான் என்வழியே சென்று கொண்டிருந்தேன்। அப்போது அங்கு ஒரு விலைமாது நின்று கொண்டிருந்தாள்। அவளை நெருங்கினேன்। அன்றைய தொழிலில் சம்பாதித்ததை அவளிடம் கொடுத்து என் இச்சையை தீர்த்துக் கொண்டேன்। பெண் சுகத்தில் திளைத்த நான், என்னிடம் முட்டை இருக்கும் கதையை சொல்ல, அவள் நைசாக என்னிடமிருந்த முட்டையை எடுத்து கொண்டு ஓடிவிட்டாள்।
அதிர்ஷ்டம் கையில் கிடைத்தும் அதை அடைய முடியாத பாவியாகி விட்டேன்। என்று அழுதான்।
முதலாமவன் , அவனது செலவுக்கு பணம் கொடுத்து விட்டு தன்வழி நடந்தான்।
நீதி: ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
அரசியலைப் போல, இந்தத் தொழிலுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை। எந்த விதத்திலாவதுமக்களை ஏமாற்றத் தெரிந்திருந்தால் போதும்।
ஆனாலும் அவர்களிலிருந்து மாறுபட்டவர்கள் இந்த இருயாசகர்களும்। தங்களது உடல் குறைபாடுகளால் அவர்கள் இந்தத் தொழில் செய்து வருகிறார்கள்।
ஆண்டவன் மட்டும் நம்மள நல்லவிதமாக படைத்திருந்தான் என்றால், இது போன்ற யாசகர்களுக்கு நாம் நிறைய செய்வோம் என்பார்கள், எப்போதென்றால் தங்களுக்கு யாராவது யாசகம் தராமல் சென்றால்।
ஆனால் ஆண்டவன் இருக்கத்தானே செய்கிறான்। ஒருநாள் அந்த ஆண்டவன் இவர்கள் முன் வந்தார்। அவரிடமும் யாசகம் கேட்டார்கள்। ஆளுக்கு மூன்று முட்டைகளைக் கொடுத்தார்।
தாங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை நினைத்தபடி இந்த முட்டையை உடைத்தால் அவை கிடைக்கும்।
சொல்லிவிட்டு மறைந்ததால், அவர் கண்டிப்பாய் கடவுள்தான் என்று நம்பினார்கள்। அன்றைய தொழில் முடியும் நேரம் வந்தது।
இந்த முட்டைகளை மறுநாள் உடைப்போம்। அதுவரை யோசிப்போம் என்று கூறிக் கொண்டவர்களாக இருவரும் தங்கள் பகுதிக்கு தனித்தனியே சென்றுவிட்டனர்।
முதலாமவன் சென்ற பாதையில் கண்பார்வையற்ற ஒரு பெண் பூ கட்டி விற்பனை செய்து கொண்டிருந்தாள்। இது அவனைப் பாதித்தது। அவளிடம் சென்று விசாரித்தான்। பார்வையற்ற நீ, ஏன் உழைத்து உண்கிறாய்। யாசகத் தொழிலில் ஈடுபடலாமே என்றான்। என் உழைப்பில் கிடைக்கும் சிறுவருவாயில் எனக்கு பூரண மனநிம்மதி கிடைக்கிறது। அடுத்தவரிடம் யாசகம் பெறுவது என்பது எனது மனசாட்சிக்கு ஒப்பானது அல்ல என்றாள்। அந்தப் பெண்ணின் பேச்சு அவனுக்குள் ஒரு மனமாற்றத்தை ஏறுபடுத்த, உடனே ஒரு முட்டையை எடுத்து , அந்தப் பெண்ணுக்கு கண்பார்வை கிடைக்க வேண்டும்। தானும் நலம்பெற வேண்டும் என்று கூறி உடைத்தான்।
அவ்வாறே நடந்தது। அந்தப் பெண் நன்றிக்கடனாக, அவனையே திருமணம் செய்ய சம்மதித்தாள்। பின்னர் மற்ற இரு முட்டைகளையும், வசதி வாய்ப்பு கோரியும், ஆரோக்கியமான, நிம்மதியான வாழ்க்கை வேண்டியும் உடைக்க அவன் மிகப்பெரும் தனவந்தனான்।
புதுவாழ்வு கிடைத்த மகிழ்வில் தன் பழைய இடத்துக்கு செல்லவில்லை। அதிர்ஷ்டத்தால் கிடைத்த செல்வத்தை பலமடங்கு பெருக்கினான்।
சில ஆண்டுகள் கழித்து, பழைய சந்தைப் பாதைக்கு சென்றான்। அங்கு மற்ற யாசகன் அமர்ந்து யாசகத் தொழில் செய்து கொண்டிருந்தான்।
தனவந்தனை அடையாளம் தெரிந்து கொண்ட யாசகனிடம், முதலாமவன் முட்டை கிடைத்தும் ஏன் இப்படியே இருக்கிறாய் என்று கேட்க, அவன் தன் குமுறலை சொல்லத் தொடங்கினான்।
உன்னிடம் சொல்லிவிட்டு, நான் என்வழியே சென்று கொண்டிருந்தேன்। அப்போது அங்கு ஒரு விலைமாது நின்று கொண்டிருந்தாள்। அவளை நெருங்கினேன்। அன்றைய தொழிலில் சம்பாதித்ததை அவளிடம் கொடுத்து என் இச்சையை தீர்த்துக் கொண்டேன்। பெண் சுகத்தில் திளைத்த நான், என்னிடம் முட்டை இருக்கும் கதையை சொல்ல, அவள் நைசாக என்னிடமிருந்த முட்டையை எடுத்து கொண்டு ஓடிவிட்டாள்।
அதிர்ஷ்டம் கையில் கிடைத்தும் அதை அடைய முடியாத பாவியாகி விட்டேன்। என்று அழுதான்।
முதலாமவன் , அவனது செலவுக்கு பணம் கொடுத்து விட்டு தன்வழி நடந்தான்।
நீதி: ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)