புதன், ஜூன் 25, 2008

நீதிக் கதை

அந்தாளு ரொம்பப் பெரிய ஆளு. அவரு நெனச்சா, நெனச்சத முடிச்சிருவாரு. உலகத்துல நடக்குற எல்லா நிகழ்வுகளும் அவருக்கு அத்துப்படி. நடந்தது, நடப்பது, நடக்கப்போறது எல்லாமும் தனக்கு தெரியும்னு சொல்லிகிறவரு.
ஆனாலும் என்ன பண்றது அவருக்கும் வயசாயிடுச்சு. அவரு கணிச்சபடி அவரை சாவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நாமதான் ரொம்ப வெவரமானவராச்சே, நம்மள சாவுகொண்டு போகாம தடுக்க ஏதாவது செய்தாகனும்.
இராப்பகலா கண்ணுமுழிச்சி அவரமாதிரியே 6 நடமாடும் பொம்மைகளை செஞ்சாரு. அவரா, பொம்மையான்னு இனம்பிரிச்சி பார்க்க முடியாத மாதிரி இருந்துச்சு.
சாவு வர்ற நாளு அவருக்கு. வலப்பக்கம் மூணு, இடப்பக்கம் மூணு பொம்மைகளை படுக்க வச்சுட்டு, நடுவுல அவரும் படுத்துக்கிட்டாரும்.
உசுர எடுக்கிறவங்களோட சிஷ்யர்கள் வந்தாங்க.
என்னடா இது நமக்கு வந்த சோதனை. இங்க 7 பேரு இருக்கானுங்களே, யாரு அந்த விவரமான ஆளு. எப்படி அவரு உசுர எடுக்குறதுன்னு சிஷ்யர்களுக்கு குழப்பம்.
சரி, இந்தக் குழப்பத்தை நம்ம குருக்கிட்டயே விட்டுறலாம்னு நேரா குருகிட்ட வந்துட்டாங்க.
என்னாச்சு சிஷ்யப்பிள்ளைங்களா, வெறுங்கையோட வந்துருக்கீங்க...
அது வந்து குரு அங்கு ஏழு பேரு இருக்கானுவ. யார தூக்குறதுன்னு தெரியலை.... அதான்.
நல்லதாப் போச்சு அம்புட்டுபயபுள்ளையும் தூக்கிறவேண்டியதுதானே...
குருவே எங்க வேலைக்கு ஆப்பு வைப்பீங்களோன்னு உங்ககிட்ட வந்தா, நீங்க உங்க பதவிக்கே ஆப்பு வச்சிடுவீங்க போலயிருக்கே...
சரி, சரி... நாம் போய் அந்தப் பயலை தூக்கிர்றேன்.

குருவுக்கே தலை சுத்திக்கிச்சு. இந்த ஏழுல யாருடா நாம தூக்க வேண்டியது.
குருவோட மனக்குமுறலும் வெவர பார்ட்டிக்கு கேட்டு அவரு மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டிருக்காரு.

குருவுக்கு மண்டையில பல்பு எரிய... யப்பா, இந்த பயபுள்ளைங்கள எப்படிப்பா, இப்படி நுணுக்கமா படைச்சே. நீ வெரி குட்டுப்பா, சூப்பரப். உன்னை மாதிரி யாராலயும் படைக்க முடியாது. வெரி கிரேட்டுன்னு.... எக்ஸ்ட்ராவா குரு பொழந்து கட்ட...
அதுவரைக்கும் பொத்திக்கிட்டிருந்த அந்த வெவரம், எய் நாந்தாம்டே இதையெல்லாம் செஞ்சேன். அத வுட்டுட்டு யாரையோ ஓவரா பேசுறியடே...ன்னு வெவரம் எகிறிச்சு.
வாடே, மாப்ள நல்ல மாடடிக்கிட்டியான்னு குரு வெவரத்த தூக்கிட்டாரு.

நீதி: எம்மாம் பெரிய கொம்பனா இருந்தாலும் மவனே கடைசியில உனக்கும் பாலுதான்.

திங்கள், ஜூன் 16, 2008

நாகூர் தர்கா வரலாறு




அற்புதங்கள் நிகழ்த்தி அகிலத்தை ஆளும் இறைநேசர்களில் நம்முள் என்றும் பிரியமானவர்
நாகூரில் அடங்கியிருக்கும் ஞானப்பேரொளி சையது அப்துல் காதிர் ஷாஹ§ல் ஹமீது
ஒலியுல்லாஹ்(ரலி). இந்நாதரின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்.
முஹம்மது நபியின் வழித்தோன்றல் சையிது ஹஸன் குத்தூஸ் என்பவருக்கும், நபியின்
மருமகன் அலி(ரலி) அவர்களின் வழித்தோன்றலான சையித் ஹமீதுத்தீன் மகளுமான அன்னை
பாத்திமாவுக்கும் மகனாக சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவின் மாணிக்கப்பூர்
நகரில் பிறந்தவர் தான் ஷாஹ¨ல் ஹமீது ஒலியுல்லாஹ்.
இறைத்தூதர் ஹிலுரு(அலை) அவர்கள் ஷாஹ¨ல் ஹமீதின் பிறப்பு குறித்து அன்னை பாத்திமாவுக்கு
அறிவித்தார்கள். மூன்று மாத கருவாக இருந்தபோதே தனது அற்புதத்தை நிகழ்த்திவிட்டா
ஷாஹ¨ல் ஹமீது நாயகம். உடல்நலக் குறைவாக இருந்த தனது தந்தை நலம் பெறுவார் என்று
தாயின் கருவறையில் குரல் எழுப்ப அவ்வாறே தந்தை குணமடைந்தார். ஆறுமாதக் கருவாக
இருந்தபொழுது தனது தாயார் தொழுகைக்காக ஒழுச் செய்ய கிணற்றுள் விழுந்த பாத்திரத்தை
தண்ணீரோடு தாயின் காலடியில் இருக்க வைத்தார். கருவறையில் இருந்தபடியே மேலும் இரண்டு
அதிசயங்களை நிகழ்த்திய ஹாஹ¨ல் ஹமீது , ஹிஜ்ரி 910ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம்
நாள் வியாழன் மாலை வெள்ளிக்கிழமை இரவில் இப்புவியில் ஜனனம் செய்தார்.
நாயகம் பிறந்ததும் ஹிலுரு(அலை) மற்றும் இல்யாஸ் நபிகள் அந்த அறையில் தோன்றினார்.
ஹிலுரு(அலை) குழந்தையை கையில் எடுத்து பாங்கு சொன்னார்கள். இல்யாஸ் நபி ‘சையது
அப்துல் காதிர்’ எனப் பெயர் சூட்டிவிட்டு தாய்க்கருகில் கிடத்திவிட்டு மறைந்தார்கள்.
நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த ஷாஹ¨ல் ஹமீது நாயகம்
சிறுவயதிலேயே நோன்பு நோற்பது, கேட்பவர் மெய் மறக்கும் நிலையில் திருமறையை இசையுடன்
ஒதுவது, மார்க்க கடமைகளை முறையாக கடைப்பிடிப்பது என்று பக்தியில் திளைத்து வந்தார்கள்.
குர்ஆன், தப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ§ ஆகிய மார்க்கக் கல்விகளையும் சரித்திரம், பூகோளம்,
கணிதம், தத்துவம், தர்க்கம், வானசாஸ்திரம் ஆகிய லௌகீகக் கல்விகளையும் பதினெட்டு வயது
நிரம்புவதற்குள் கற்று முடித்தார்கள். இடையிடையே ஹிலுறு(அலை) அவர்களும் சிறுவன் முன்
தோன்றி வேதத்தை தெளிவாக்கி வைத்தாகள்.
வாலிப பருவம் அடைந்தது ஷாஹ¨ல் ஹமீது அவர்கள் தங்களுக்கான ஞானகுருவைத்
தேடி ஹிஜ்ரி 928ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் ஒரு திங்கட்கிழமை வழித்துணையின்றி,
கைச்செலவுக்குப் பொருள் இன்றி, துறவுக்கோலத்துடன் குவாலியர் பட்டணத்துக்கு விரைந்தார்.
நடை பயணமாக காடுகளை கடந்து வந்து கொண்டிருந்த நாயகத்தை திருடர்கள்
கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நெருங்கினார்கள். அவரிடம் பொருள் இல்லாததால் நாயகத்தை
கொலைசெய்யக் கருதி ஆயுதங்களால் வெட்டியவர்கள் தங்கள் உடல்களே துண்டாகி விழுந்தனர்.
கொள்ளையர்களின் உறவினர்கள் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அவர்களின் உடலை ஒட்டி,
உயிர் கொடுத்து அற்புதம் நிகழ்த்தினார்.
குவாலியர் நகரை நெருங்குகையில் அங்கிருந்த சிற்றூரில் ஒரு சிறிய மசூதியில் நாயகம் தங்கி தனது
ஞானகுருவை இறைவனே காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அப்போது தோன்ரிய
அசரீரி ‘ஷாஹ் அல் ஹமீது’ என்ற கருணைப் பெயரை உமக்கு சூட்டியுள்ளோம். உமது ஞானகுரு
முஹம்மது கௌது. அவரிடம் செல்’’ என்றது.
அதன்படி முஹம்மது கௌதுவிடம் சென்று அவரது மெய்ஞ்ஞான பயிற்சிக்கூடத்தில் பயின்று
மெய்ஞ்ஞானத் தீட்சை பெற்றுக் கொண்டார். பத்து ஆண்டுகள் மெய்ஞ்ஞானக் கல்வி பயின்றவர்
பின்னர் அங்கிருந்து கிளம்பினார்கள். அவருடன் நானூற்று நாற்பது சீடர்கள் உடன் சென்றனர்.
அப்போது மலைவழியாக வரும்போது ஆதிபிதா ஆதம் (அலை), ஹவ்வா(அலை) நாயகத்துக்கு
ரிக்வத் எனப்படும் திருவோடு போன்றதொரு பாத்திரத்தை வழங்கினார்கள். தேவைபடும் போது
தேவைப்பட்ட உணவை இதனின்று பெற்றுக் கொள்ளலாம்.
ஊர்தோறும் மக்களுக்கு உபதேசித்தும், உண்மையைப் பேணச் செய்து இஸ்லாத்தை நிலை
நாட்டிக் கொண்டே நாயகம் அவர்கள் மாணிக்கப்பூர் வந்தடைந்தனர். அங்கு கொஞ்ச காலம்
இருந்தவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்வதை தடை செய்தவர்களாக சீடர்களுடன்
லாகூர் சென்றார். அங்கு இறைவனின் ஆணைப்படி காழி நூருத்தீன் முஃப்தி என்பவரின் மனைவி
ஜஹாரா பீபிக்கு தான் மென்ற வெற்றிலை தாம்பூலத்தை கொடுத்து அவரை கருவுறச் செய்தார்.
அவர் பெறப்போகும் முதல் குழந்தைக்கு ‘முஹம்மது யூசுஃப்’ என பெயரிட நூருத்தினிடம்
தெரிவித்ததோடு குழந்தையின் தன்மை குறித்தும் தெரிவித்த நாயகம் தன் சீடர்களுடம் பயணத்தை
தொடர்ந்தார்.
மேற்கு, தென்மேற்கு ஆசிய நாடு நகரங்களைச் சுற்றிக்கொண்டு துர்க்கி தேசத்தினுள் புகுந்த
நாயகம், கர்ஸான என்ற பட்டணத்தை அடுத்துள்ள மலையில் நாற்பது நாட்கள் தனித்து சில்லா
இருந்தார்கள். அன்று ஹிஜ்ரி952ம் ஆண்டு ரஜப் மாதம் 12&ம் நாள் லாகூரில் ஜஹாரா பீபிக்கு மகன்
பிறந்தான். மனக்கண்ணால் தன் மகனை கண்டு உரையாடி முத்தமிட்டு மகிழ்ந்தார்கள்.
ஒருநாள் இரவு தொழுகையின் போது தனது தந்தை மரணிப்பதை அறிந்து தன் சீடர்களுடன்
ஒரே இரவில் ஆசியா மைனரிலிருந்து இந்தியாவின் மாணிக்கப்பூரை நடந்தே அடைந்து அதிசயம்
நிகழ்த்திய நாயகம் தந்தை மறைந்து 40 தினங்களுக்குப் பின் அரேபியாவுக்கு கிளம்பினார்கள்.
அங்கு மக்கா, மதீனாவில் ஹஜ்ஜு செய்தபடி இருந்தார் நாயகம். அப்போது நாயகம் நிகழ்த்திய
அதிசயத்துக்கு பரிசாக இபுனு ரவூஃப் தனது கப்பலை நாயகத்துக்கு சொந்தமாக்கி பத்திரம்
கொடுக்க, அதை தன்னிடம் வந்து யாசித்தவனுக்கு கொடுத்துவிட்டு கஃபாவை நோக்கி
நடந்தார்கள்.
நாயகம் அவர்கள் தங்களின் 37&ம் வயதில் ஜித்தா துறைமுகத்திலிருந்து கப்பல் ஏறி கேரளாவின்
பொன்னாணி எனும் ஊரில் கரையிறங்கினார்கள். அப்போது நாயகத்துடன் அவரது மகன்
யூசுஃப் ஆண்டகையும் இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து லட்சத்தீவுகள், சிலோன் முதலிய
வெளிநாடுகளுக்கும் காயல்பட்டணம், நத்தம், மேலப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் சென்று
இறைப்பிரசங்கம் செய்தவர் தஞ்சாவூரை அடைந்தார். அதை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கன்
உடல்நலம் குன்றியிருந்தார். நாயகத்தின் சிறப்புகள் தெரிந்து அவரைக் கண்டு நோய் நீங்கப்பட்ட
மன்னன், அதற்கு வெகுமதியாக நிலங்களைக் கொடுத்தான். அந்த இடத்தின் பகுதியில் தான்
தர்காவும், அதைச் சேர்ந்த குளம் முதலிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.
ஷாஹ¨ல் ஹமீது நாயகம் அவர்கள் நாஹ¨ரில் இருபத்தெட்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அற்புதங்கள் பல நிகழ்த்திய நாகூர் நாதர் ஹிஜ்ரி 978ம் வருஷம் ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம்
நாள் வெள்ளிக்கிழமை இரவு புகழுடம்பு எய்தினார்கள்.
தர்கா வரலாறு:
நாகூர் நாயகம் மறைந்ததும் அவரது புதல்வர் தனது மனைவி, மக்களுடன் அங்கு குடித்தனம்
நடத்தி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருந்ததோடு
நாயகத்தின் கஃப்ரை சுற்றி பலகையால் பள்ளி போல் அடைத்தார்கள். அந்தப்பள்ளியே இன்று
அழகிய ஐந்து மினாராக்களை( கோபுரம்) உடையதாய் விளங்குகிறது.
முதல் மினாராவை இப்ராஹீம் கான் என்பவர் ஹிஜ்ரி ஆயிரத்து ஐம்பத்தைந்தாம் வருடம்
கட்டினார். இதற்கு சாகிபு மினாராவென்று பெயர். இரண்டாம் மினாராவை செய்யது மரைக்காயர்
கட்டிக் கொடுத்தார். இம்மினாரா நாயகத்தின் தலைப் பக்கம் இருப்பதால் தலைமாட்டு மினாரா
எனப்படுகிறது. இந்த மினாராவில் இந்து அன்பர் ஒருவர் சின்ன தங்கக் கலசத்தை அமைத்துக்
கொடுத்துள்ளார்.
மூன்றாம் மினாரா( முதுபக்கு மினாரா) மலாக்காவை சேர்ந்த பீர் நெய்னா என்பவராலும்,
நான்காம் மினாரா (ஓட்டு மினாரா) பரங்கிப்பேட்டை நீதிபதி தாவுக்கான் என்பவராலும்,
ஐந்தாம் மினாரா(பெரிய மினாரா) தஞ்சையை ஆண்டுவந்த பிரதாபசிங்கு மன்னனாலும் கட்டிக்
கொடுக்கப்பட்டது. பெரிய மினாரா 131 அடி உயரம் கொண்டதாகும்.
நாகூர் தர்கா ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. சக்கரவர்த்தி சுல்தான் துல்கர்னைன்
கட்டிய முதுபக்கு(1). இந்த ஸ்தலத்தில் தான் நாயகம் மரணித்தார்கள். இந்த ஸ்தலத்தில் உள்ள
அற்புதக்கேணியின் தண்ணீரை புண்ணிய தீர்த்தம் என்று கருதி பக்தர்கள் எடுத்து செல்லுகின்றனர்.
நாயகத்தின் இறந்த உடலை குளிப்பாட்டி யாஹ§சைன் பள்ளி(2).இது முதுபக்குக்கு வெளியில்
தென்புறத்தில் இருக்கின்றது. நாயகத்தின் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் தேங்கி நின்ற சிறிய
குட்டை தான் தர்கா குளம்(3). குட்டை போலிருந்ததை அச்சை சுல்தான் பெருங்குளமாக வெட்டி
தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தான்
.
தர்காவில் இருக்கும் பீர்மண்டபம்(4). திருவிழாக்காலங்களில் பீர் சாயபு என அழைக்கப்படும்
தபோதனர்கள் 3 நாள் உபவாசம் இருந்து நோன்பு திறந்துவிட்டு பீர்மண்டபத்தில் வந்து அமர்வர்.
நாயகம் திருமுடியிறக்கிய கடற்கறை ஓரம் தான் சில்லடி(5) என்ற ஆலயம் இருந்து வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவும் நடந்து வருகிறது.
நாயகம் அவர்கள் 40 நாள் இறைதியானம் இருந்த புன்னிய ஸ்தலம் வாஞ்சூர் பள்ளிவாசல்(6). இது
நாகூரிலிருந்ஹ§ 21/2 மைல் தொலைவில் உள்ளது.
ஹஜ்ரத் ஷாஹ¨ல் ஹமீது பாதுஷா ஆண்டவர்களின் சன்னதி 7 வாயில்கள் கொண்டது. இவை
அனைத்தும் வெள்ளித்தகட்டால் வேயப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கான
குத்துவிளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்நிதிக்குள் எந்த மதத்தினரும் செல்லலாம்.
இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி கடைசி மூன்று வாசல்களை கடக்க மட்டும் பெண்களுக்கு
அனுமதியில்லை. நாகூர் ஆண்டவர், அவரது மகன் முகம்மது யூசுஃப், மருமகள் செய்யிதா சுல்தான்
பீவி அம்மாள் ஆகியோரின் சமாதிகள் உள்ளே அமைந்துள்ளது. நாகூர் ஆண்டவர் இடுப்பில்
கட்டியிருந்த இரும்புச்சங்கிலி, குமிழ்கள் இல்லாத காலணி, அதிசயம் நிகழ்த்திய கொம்புத்
தேங்காய ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அரபி மாதம் ஜமாத்துலாகிறு பிறை 1&ல் தர்காவில் கொடியேற்றத் திருவிழா நடக்கும் பிறை 10ம்
நாள் இரவு நாகையிலிருந்து அதி விமரிசையாக சந்தனக்கூடு புறப்பட்டு வந்து ஆண்டவர்கள்
சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பிறை 11&ல் பீர் ஏகுதல் நடைபெற்று 14&ம்
இரவு இறுதிக்கட்டம் அடையும். இந்த திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் கலந்து
கொள்கின்றனர். நாகூர் சமாதியில் போர்த்தப்படும் சால்வை, மலர்ப் போர்வை பழனியைச்
சேர்ந்த ஒரு இந்துக்குடும்பத்தாரால் இன்றளவும் கொண்டுவரப்படுகிறது. நாகூர் தர்காவை
நாயகத்தின் வாரிசுகளான சுமார் 640 குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர். தர்காவுக்கு வரும்
காணிக்கைகளே இவர்களுக்கு வருமானமாகும்.
அனைத்து மதத்தினருக்கும் அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார் நாகூர் ஆண்டவர்.