''எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்...'' பண்பலை வரிசை வழியாக காற்றில் தவழ்ந்து வந்த பாடலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வாட்ச்மேன் , வாசலில் கிறீச்சிட்ட சொகுசுக் காரின் சப்தம் கேட்டு ஓடோடிச் சென்று கதவைத் திறந்து விறைப்பாக சல்யூட் அடித்தார்...
என்ன வாட்ச்மேன் பாட்டு ரொம்பவும் சலனப்படுத்திடுச்சோ! என்றபடியே காரிலிருந்து இறங்கினார் பளிச்சிடும் வேட்டி சட்டையில் மயில்வாகனன். நெற்றியில் ஒளிவிடும் திருநீற்றுப் பட்டை அவரின் கடவுள் பக்தியை பறை சாற்றியது. கூடவே உயர்நாகரிகத் தோற்றத்துடன் ஒரு தம்பதியும் இறங்கியது.
பங்களாவின் முகப்புத் தோற்றமே அந்தத் தம்பதியை வியக்க வைக்க மயில்வாகனன் முகமெல்லாம் மகிழ்ச்சி. ரொம்பத் திட்டமிட்டு கட்டப்பட்ட வீடு இது. அனுபவத்துக்கு மரியாதை கொடுக்கும் வகையில் என்ஜீனியர் பிளான் இல்லாமல் கட்டிட மேஸ்திரியோட பிளான்ல கட்டியிருக்கோம். இந்த ஈ.சி.ஆர். சாலையில் கட்டியிருக்குற எத்தனையோ பங்களாவுக்கு மத்தியில் இதனோட சிறப்பே தனி.
என்ன பண்றது எல்லாரும் அமெரிக்காவிலேயே குடிமக்கள் அந்தஸ்து கிடைச்சதனால அங்கேயே இருந்துட்டாங்க. அதனாலத்தான் இந்த பங்களாவ விக்கிறோம்.
எங்களுக்கு பிடிச்சிருக்கு. பணத்தை ஒரே காசோலையில கொடுத்துடுறோம். இந்தாங்க... சொல்லிவிட்டு சொகுசுக்காரில் ஏறிக்கொண்ட தம்பதிக்கு கை அசைவு காட்டியபடி தனது கையில் அவர்கள் அளித்த தரகு பணத்துடன் தன் குடிசைக்கு விரைந்தார் மயில்வாகனன்.
புதன், நவம்பர் 28, 2007
சனி, நவம்பர் 24, 2007
வெட்கப்படாம சிரிச்சு வையுங்க!
பயணி: கண்டக்டர் , பஸ்ல சீட்டெல்லாம் கிழிஞ்சுப்போய் கெடக்குதே? கண்டக்டர்: யோவ்! டிக்கெட்ட கிழிக்கிறதுமட்டும்தான் என் வேலை...
----------------
மனனவி: போரடிக்கிற இந்தப்படத்தையும் எப்படிங்க பொறுமையாப் பார்த்துட்டு இருக்கிறீங்க!
மனைவியை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்கிறார் கணவர்.
---------------
நண்பன் 1: டேய், இவ்வளவுதூரம் பழகியும் கடைசியில் உன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடாம விட்டுட்டியேடா!
நண்பன் 2: உங்கிட்ட அவ்வளவுதூரம் பழகுனதுனாலத்தான் உன்னைக் கூப்பிடலை!
--------------
----------------
மனனவி: போரடிக்கிற இந்தப்படத்தையும் எப்படிங்க பொறுமையாப் பார்த்துட்டு இருக்கிறீங்க!
மனைவியை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்கிறார் கணவர்.
---------------
நண்பன் 1: டேய், இவ்வளவுதூரம் பழகியும் கடைசியில் உன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடாம விட்டுட்டியேடா!
நண்பன் 2: உங்கிட்ட அவ்வளவுதூரம் பழகுனதுனாலத்தான் உன்னைக் கூப்பிடலை!
--------------
செவ்வாய், நவம்பர் 13, 2007
என்னத்த சொல்ல... எல்லாத்தையும் சொல்லலாம்!
டிரிங்...டிரிங்... வணக்கம். இது உங்கள் பிக் எப்.எம். 92.7ன்ரகசிய சினேகிதி நேரம். உங்கள் வாழ்க்கையின் ரகசியங்களை மனம் விட்டு பேசுங்க. தீர்வு காணுங்க.
ஹலோ... மேலம் நான் ........... பேசுறேன் மேடம்...
சொல்லுங்க...
மேடம் என் லவ்வருக்கு நாளைக்கு (13-11-2007) கல்யாணம். அவர் என்னத்தான் கட்டிக்குவேன்னு இருந்தாரு. அவங்க வீட்டுல கட்டாயப்படுத்தி அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அப்படியே கல்யாணம் பண்ணுனாலும் அந்தப் பெண்ன்ண தொடமாட்டேன்னு என்கிட்ட சத்தியம் பண்ணியிருக்காரு...
ஐயோ... என்னம்மா... இப்படிச் சொல்றீங்க. நீங்க கல்யாணம் பண்ணாட்டியும், கல்யாணம் பண்ணப்போற அந்தப் பொண்ணோட வாழ்க்கையை நினனச்சுப்பாருமா!
மேடம்... அவர் என்னைத் தொட்டுட்டார் மேடம். அவருக்கு நான் தான் இஷ்டம். நாளைக்கு வரைக்கும் டைம் இருக்கு. எப்படியும் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்...
நீங்க உங்க முயற்சியை கைவிட்டுடாதீங்க. நீங்களே அவரை கல்யாணம் பண்ணுங்க. இன்னொரு பொண்ணோட வாழ்க்கை தொலையாம பார்த்துக்கங்க. உங்க அப்பா, அம்மாவைக் கூப்பிட்டுப் போய் பேசுங்க... பெஸ்ட் ஆப் லக்....
நேயர்களே உங்களுக்கான பாடல்....
...........................
ஹலோ! பிக் எப்.எம். ரகசிய சினேகிதியா!
ஆமா... சொல்லுங்க... என்ன உங்கப் பிரச்னை!
மேடம் நான் ஆவடியிலிருந்து சுமதி பேசுறேன். எனக்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகப்போகுது. 1 வயசுல ஒரு குழந்தை இருக்குது. ஆரம்பத்துல என் மேல பாசமா இருந்த கணவன் இப்போ அப்படியில்லை. குடிக்கிறார். அடிக்கிறார். என்னை சரிவர "கண்டுக்கிறதே" இல்லை.
இப்படி சோகமாக இருக்கும் போது எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கிட்ட என் கஷ்டத்தைச் சொன்னேன். அவரு ஆறுதலாகப் பேசியது எனக்கு பிடிச்சு அவருகிட்ட நல்லப் பழகி ஒருநாள் என்னையும் அவருகிட்ட கொடுத்துட்டேன். ஆனால் எனக்கு மனசு கவலையாயிடுச்சு.
என் வீட்டுக்காரர்கிட்டயும் இதை சொல்லி மன்னிப்புக் கேட்டேன். அவரோ எந்தப்பதிலும் சொல்லல. ஆனா எதையும் கண்டுக்கலை. இது என்னை ரொம்ப சங்கடப்படுத்திக்கிட்டு இருக்கு மேடம்...
சுமதி நீங்க செஞ்ச தப்பை எப்ப உணர்ந்தீங்களோ அப்பவே திருந்திட்டீங்க. சின்ன வயசு அப்படி ஏதாவது தோணிருக்கலாம். இனிமே அந்தமாதிரி எதையு நினைக்காதீங்க. உங்க கணவரை அன்பால திருத்துங்க. நல்ல டாக்டருக்கிட்ட கூட்டிக்கிட்டு போங்க. வாழ்க்கையைபுதுசா தொடங்குங்க....
இதோ உங்களுக்கான பாட்டு................
...........................
ஹலோ மேடம், நான் தி.நகரிலிருந்து ரமேஷ் பேசுறேன். நான் கார் டிரைவரா இருக்கேன். மூணு வருஷமா ஒரு பொண்ணை லவ் பண்ணினேன் மேடம். ஆனா அந்தப் பொண்ணு வேற் ஒருத்தன்கிட்ட பேசுறதா என் நண்பர்கள் சொன்னாங்க. விசாரிச்சப்ப அவ இரண்டுவருஷமா அவனன லவ் பண்றாளாம். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. என் காதலை ஏத்துக்க மாட்டனுட்டா. இந்த நினைப்பில் கார் ஓட்டிக்கிட்டு போகும்போது வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகி எனக்கு லேசா அடியும் பட்டுடுச்சி.
இப்ப அவ கல்யாணம் செய்துக்கிட்டு போயிட்டா. நான் பித்து பிடித்த மாதிரி நடந்துக்கிறதா என் நண்பர்கள் சொல்றாங்க....
இங்க பாருங்க... நீங்க காதலிச்சவங்க நல்ல வாழணும்னு நினைக்கிறது நல்லது. அந்தப் பொண்ணை மறந்துட்டு சொந்தமா கார் வாங்கணும், சம்பாதிச்சு முன்னேறனும்னு நினனங்க. உங்க நண்பர்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டுங்க... பை...
............. கடந்த 12-11-07 இரவு 11.30 மணிக்கு மேற்கண்ட பண்பலை வரிசையில் நான் கேட்ட சில ரகசியத் தகவல்களும், பரிகாரங்களும் தான் இவை.
மனக்கவலையை பிறரிடம் சொல்லி மீள்வது நல்ல விஷயம் தான். ஆனால் இவர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாமே பிற்ரால் தரப்பட்ட மனக்கவலையா? அல்லது தனக்குத்தானே தேடிக்கொண்ட மனக்கவலையா!
சரி... அதை விடுங்க... பெண்களே போன் செய்து நான் காதலருடன் 'படுத்தேன்", தெரிந்தவரிடம் 'படுத்தேன்" என்று பறைசாற்றுவத்... ஆம்பிள்ளைனா அப்படி இப்படித்தான் இருப்பான் என்பதிலும் சரிநிகர் ச்மானமாக பெண்கள் வந்து விட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.
ஒரு நாள் நிகழ்ச்சியின் சில நிமிடங்கள் கேட்டதற்கே இந்தமாதிரியான விஷய்ங்கள் என்றால்.... முடியல... முடியல்... வடிவேல் பாணியில் மிரள வேண்டியது தான்.
தன் மீதான் தவறுகளையு, சூழ்நிலல தடுமாற்றங்களையும் என்று உணர்ந்து அதை தடுக்கிறோமோ அப்போது இதுமாதிரியான போன்கால்களுக்கு கண்டிப்பாக வேலையில்லை.
ஹலோ... மேலம் நான் ........... பேசுறேன் மேடம்...
சொல்லுங்க...
மேடம் என் லவ்வருக்கு நாளைக்கு (13-11-2007) கல்யாணம். அவர் என்னத்தான் கட்டிக்குவேன்னு இருந்தாரு. அவங்க வீட்டுல கட்டாயப்படுத்தி அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அப்படியே கல்யாணம் பண்ணுனாலும் அந்தப் பெண்ன்ண தொடமாட்டேன்னு என்கிட்ட சத்தியம் பண்ணியிருக்காரு...
ஐயோ... என்னம்மா... இப்படிச் சொல்றீங்க. நீங்க கல்யாணம் பண்ணாட்டியும், கல்யாணம் பண்ணப்போற அந்தப் பொண்ணோட வாழ்க்கையை நினனச்சுப்பாருமா!
மேடம்... அவர் என்னைத் தொட்டுட்டார் மேடம். அவருக்கு நான் தான் இஷ்டம். நாளைக்கு வரைக்கும் டைம் இருக்கு. எப்படியும் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்...
நீங்க உங்க முயற்சியை கைவிட்டுடாதீங்க. நீங்களே அவரை கல்யாணம் பண்ணுங்க. இன்னொரு பொண்ணோட வாழ்க்கை தொலையாம பார்த்துக்கங்க. உங்க அப்பா, அம்மாவைக் கூப்பிட்டுப் போய் பேசுங்க... பெஸ்ட் ஆப் லக்....
நேயர்களே உங்களுக்கான பாடல்....
...........................
ஹலோ! பிக் எப்.எம். ரகசிய சினேகிதியா!
ஆமா... சொல்லுங்க... என்ன உங்கப் பிரச்னை!
மேடம் நான் ஆவடியிலிருந்து சுமதி பேசுறேன். எனக்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகப்போகுது. 1 வயசுல ஒரு குழந்தை இருக்குது. ஆரம்பத்துல என் மேல பாசமா இருந்த கணவன் இப்போ அப்படியில்லை. குடிக்கிறார். அடிக்கிறார். என்னை சரிவர "கண்டுக்கிறதே" இல்லை.
இப்படி சோகமாக இருக்கும் போது எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கிட்ட என் கஷ்டத்தைச் சொன்னேன். அவரு ஆறுதலாகப் பேசியது எனக்கு பிடிச்சு அவருகிட்ட நல்லப் பழகி ஒருநாள் என்னையும் அவருகிட்ட கொடுத்துட்டேன். ஆனால் எனக்கு மனசு கவலையாயிடுச்சு.
என் வீட்டுக்காரர்கிட்டயும் இதை சொல்லி மன்னிப்புக் கேட்டேன். அவரோ எந்தப்பதிலும் சொல்லல. ஆனா எதையும் கண்டுக்கலை. இது என்னை ரொம்ப சங்கடப்படுத்திக்கிட்டு இருக்கு மேடம்...
சுமதி நீங்க செஞ்ச தப்பை எப்ப உணர்ந்தீங்களோ அப்பவே திருந்திட்டீங்க. சின்ன வயசு அப்படி ஏதாவது தோணிருக்கலாம். இனிமே அந்தமாதிரி எதையு நினைக்காதீங்க. உங்க கணவரை அன்பால திருத்துங்க. நல்ல டாக்டருக்கிட்ட கூட்டிக்கிட்டு போங்க. வாழ்க்கையைபுதுசா தொடங்குங்க....
இதோ உங்களுக்கான பாட்டு................
...........................
ஹலோ மேடம், நான் தி.நகரிலிருந்து ரமேஷ் பேசுறேன். நான் கார் டிரைவரா இருக்கேன். மூணு வருஷமா ஒரு பொண்ணை லவ் பண்ணினேன் மேடம். ஆனா அந்தப் பொண்ணு வேற் ஒருத்தன்கிட்ட பேசுறதா என் நண்பர்கள் சொன்னாங்க. விசாரிச்சப்ப அவ இரண்டுவருஷமா அவனன லவ் பண்றாளாம். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. என் காதலை ஏத்துக்க மாட்டனுட்டா. இந்த நினைப்பில் கார் ஓட்டிக்கிட்டு போகும்போது வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகி எனக்கு லேசா அடியும் பட்டுடுச்சி.
இப்ப அவ கல்யாணம் செய்துக்கிட்டு போயிட்டா. நான் பித்து பிடித்த மாதிரி நடந்துக்கிறதா என் நண்பர்கள் சொல்றாங்க....
இங்க பாருங்க... நீங்க காதலிச்சவங்க நல்ல வாழணும்னு நினைக்கிறது நல்லது. அந்தப் பொண்ணை மறந்துட்டு சொந்தமா கார் வாங்கணும், சம்பாதிச்சு முன்னேறனும்னு நினனங்க. உங்க நண்பர்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டுங்க... பை...
............. கடந்த 12-11-07 இரவு 11.30 மணிக்கு மேற்கண்ட பண்பலை வரிசையில் நான் கேட்ட சில ரகசியத் தகவல்களும், பரிகாரங்களும் தான் இவை.
மனக்கவலையை பிறரிடம் சொல்லி மீள்வது நல்ல விஷயம் தான். ஆனால் இவர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாமே பிற்ரால் தரப்பட்ட மனக்கவலையா? அல்லது தனக்குத்தானே தேடிக்கொண்ட மனக்கவலையா!
சரி... அதை விடுங்க... பெண்களே போன் செய்து நான் காதலருடன் 'படுத்தேன்", தெரிந்தவரிடம் 'படுத்தேன்" என்று பறைசாற்றுவத்... ஆம்பிள்ளைனா அப்படி இப்படித்தான் இருப்பான் என்பதிலும் சரிநிகர் ச்மானமாக பெண்கள் வந்து விட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.
ஒரு நாள் நிகழ்ச்சியின் சில நிமிடங்கள் கேட்டதற்கே இந்தமாதிரியான விஷய்ங்கள் என்றால்.... முடியல... முடியல்... வடிவேல் பாணியில் மிரள வேண்டியது தான்.
தன் மீதான் தவறுகளையு, சூழ்நிலல தடுமாற்றங்களையும் என்று உணர்ந்து அதை தடுக்கிறோமோ அப்போது இதுமாதிரியான போன்கால்களுக்கு கண்டிப்பாக வேலையில்லை.
சனி, நவம்பர் 10, 2007
தமிழ் கூத்து!
தான் தான் தான்
என்பதை அறிய
இயலாதான் இயலாதான்!
அவன் அவன் அவன் அவன்
தன் கடன் தான் செய்தால்
தன்னாலே தானுயர்வான்!
என்பதை அறிய
இயலாதான் இயலாதான்!
அவன் அவன் அவன் அவன்
தன் கடன் தான் செய்தால்
தன்னாலே தானுயர்வான்!
புதன், நவம்பர் 07, 2007
தமிழண்ணனுக்கு நினைவாஞ்சலி!
இதழ் விரித்த சிரிப்பு
இன்னும் மறக்கவில்லை!
கண் பேசும் ஜாடையின் மயக்கம்
எனக்குத் தெளியவில்லை!
தளர் நடையாம் ஊன்றுகோல்
தெரிவிக்க வில்லை
அண்ணனாய் இருந்தவனே!
சிங்'காலன்' வந்தானோ
உயிர் பறிக்க!
பங்கருக்குள்ளும்
பாய்ந்த குண்டு
பயந்தே வெடித்ததோ
உனைக்கண்டு!
ஈழ மண்ணில்
நீ இட்டது
இறுதி முத்தம்!
உலகுள்ளவரை
ஒலிக்கும் அது
தமிழின் சத்தம்!
இன்னும் மறக்கவில்லை!
கண் பேசும் ஜாடையின் மயக்கம்
எனக்குத் தெளியவில்லை!
தளர் நடையாம் ஊன்றுகோல்
தெரிவிக்க வில்லை
அண்ணனாய் இருந்தவனே!
சிங்'காலன்' வந்தானோ
உயிர் பறிக்க!
பங்கருக்குள்ளும்
பாய்ந்த குண்டு
பயந்தே வெடித்ததோ
உனைக்கண்டு!
ஈழ மண்ணில்
நீ இட்டது
இறுதி முத்தம்!
உலகுள்ளவரை
ஒலிக்கும் அது
தமிழின் சத்தம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)