உடன் பிறப்பவன்
'நான்'-
கண்டு கொள்வதில்லை நீ!
கை வீசி, கால் அசைத்தும்
'என்' தடம்
தெரிவதில்லை!
வாழ்க்கைப் பயணத்தில்
பல மைல்கல் -
அப்போதும் உடன் 'நான்'
கானல் நீர்,
அடி வானம்
'என்' மீதான உன் உருவகம்
வாலிபம் களைந்ததால்
வாட்டம் -
'நான்' இளமையாய்!
தேடுகிறாய் 'முடிவை'
கண்ணாமூச்சி
காட்டுகிறேன்!
கானல் நீர், அடிவானம்
சத்தியம்
அழுது புலம்புகிறாய்!
'நான்'
அரவணைக்கிறேன்.
சனி, செப்டம்பர் 29, 2007
ஆத்திக அரசியல்
கிருஷ்ணன் சக்கரம்
கர்ணன் குண்டலம்
லட்சுமணன் கோடு
அர்ஜுனன் வில்
பீமனின் கதை
- இன்னும் இங்கே
இருக்குது ஆத்திக அரசியல்!
கர்ணன் குண்டலம்
லட்சுமணன் கோடு
அர்ஜுனன் வில்
பீமனின் கதை
- இன்னும் இங்கே
இருக்குது ஆத்திக அரசியல்!
புதன், செப்டம்பர் 26, 2007
தலை காக்குமா தமிழகம்?
ராமர் பாலத்தை இடிப்பதாகக் கூறும் தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையைக் கொய்து வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் தருவதாக கூறியிருக்கிறார் ராம்விலாஸ் வேதாந்தி.
தமிழைக்காக்க அன்று தண்டவாளத்தில் தலைவைத்தவர் என்று கருதப்படும் கருணாநிதியின் தலையை காக்க தமிழர்கள் என்னென்ன செய்யலாம்?
தமிழைக்காக்க அன்று தண்டவாளத்தில் தலைவைத்தவர் என்று கருதப்படும் கருணாநிதியின் தலையை காக்க தமிழர்கள் என்னென்ன செய்யலாம்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)