சனி, ஜனவரி 30, 2010
இலங்கையின் சிறுபான்மையினர் இனி யார்?



மகிந்த ராஜபக்சே இலங்கையின் அதிபர் பதவியை மீண்டும் பெற்றிருக்கிறார்.
இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி பதிவான வாக்குகள் 1,04,95,451. செல்லுபடியான வாக்குகள் 10,393,613. மகிந்த ராஜபக்சே 60,15,934(57.88%)வாக்குகள் பெற்றிருக்கிறார். பிரதான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சரத் பொன்சேகா 41,73,185 (40.15%) வாக்குகள் பெற்றிருக்கிறார். தமிழர்களுக்காக குரல் எழுப்பிக்(?) கொண்டிருந்த சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகள் 9,662 (0,09%).
தமிழர் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள், வாக்காளர் அடையாள அட்டை தரப்படாமை, வாக்குச் சாவடி செல்வதற்கான போக்குவரத்துகள் நிறுத்தம், தமிழர்களின் குறைந்த சதவீதத்தினாலான வாக்களிப்பு வீதம் ஆகியவை தனது தோல்விக்கான காரணங்களாக சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். மேலும் ராஜபக்சே அரசின் அச்சுறுத்தல் செயல்பாடுகளும் தன் தோல்விக்கு காரணம் என்று கூறியிருப்பதோடு தாம் இந்த தேர்தல் முடிவினை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பேட்டியினூடே தெரிவித்திருக்கிறார்.
மகிந்த ராஜபக்சே தனது வெற்றியைத் தொடர்ந்து கொடுத்த பேட்டியில் இந்த அரசு எல்லாருக்குமான அரசு (தமிழர்களைத் தவிர்த்து...?). நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரையும் சமத்துவத்தோடுதான் பார்க்கிறது. சிறுபான்மையினர் என்ற பேதமில்லை என்று கூறியிருக்கிறார்.
எல்லாம் பேச்சோடு சரி... தனது சிங்கள பேரினத்துக்காக தமிழர்களின் பெரும்பகுதியை காவு வாங்கிவிட்டு, எஞ்சியோரையும் வதைமுகாம்களில் அடக்கி ஒடுக்கிவிட்டவர்தான் இந்த மகிந்த. பதவி, அதிகார வெறியினை தனது குடும்பத்தின் கையில் வைத்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் கூட்டுழைப்புடன் ஒரு இன அழிப்பினைச் செய்து அதில் ஏறக்குறைய 90 சதவீதம் பேரை அழித்து விட்டார்கள். இருக்கும் 10 சதவீதம் பேர்களுக்கும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை நசுக்கி வைத்திருப்பதால் அது கேள்விக்குரியான வாழ்வுதான்.அதுமட்டுமல்ல டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகிய 'பச்சை' தமிழர்கள், இருக்கும் தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்யப் பயன்படுத்தப்படுவார்கள்.
தனது பழைய அதிபர் பதவியின் குறையாக உள்ள ஒன்றரை ஆண்டுகாலம், புதிய பதவியின் சுமார் ஆறு ஆண்டுகாலம் என மொத்தமாக ஒரு ஏழரை ஆண்டுகாலத்தை குத்தகை எடுத்திருக்கிறது இந்த ஏழரை பக்சே...
இனி அதன் நடிவடிக்கைகள் இதுவாகத்தான் இருக்கும்...
தனக்கான வெற்றிக்கு பெருவாரியான வாக்குகளை அளித்த சிங்களர்களை வாழ்விக்கவே இந்த ஏழரை விரும்பும். தமிழர்கள் பகுதிகளை இல்லாமல் போகச் செய்து தந்து பௌத்தப் பேரினவாதத்தை அமர்த்தும்.
முக்கியமாக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பார்முலாவில் சிறுபான்மை இஸ்லாமியர்களுடன் வைத்திருந்த கூட்டணி முடிவு பெறும். ஏற்கனவே ஒரு இனத்தை அழித்த மமதையில் இதோ இந்த இனத்தையும் அழித்துவிட்டால் இலங்கை என்பது சிங்களர் தீவு என்றே நிலைத்து விடும்.
இலங்கை அரசின் வருவாய்க்கான கேந்திரங்களாக இருக்கும் இஸ்லாமிய தொழில் அதிபர்களையும், வெளிநாடுகளில் வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்களையும் உள்நாட்டில் பெருந்தனக்காரர்களாக இருப்பவர்களையும் இனி வெள்ளைவேன் சம்பவங்கள் மூலமாகக் கடத்தி தங்கள் கைக்குள் கொண்டு வர சிங்களர்கள் முயற்சிப்பார்கள்.
ஆட்சி அதிகாரம் சிங்களமயமாக்கப்படும். எப்படி நேபாளம் இந்து நாடு என்று தனித்துவம் பெற்றிருக்கிறதோ அதே போல் இலங்கை என்பது மருவி சிங்களத் தேசம் என்று மாறும்.
பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் சிங்களனாகவே இருக்கும்....
இந்த நிலையை வரவிடுவதுவும், வராமல் இருக்கச் செய்வதும் இருக்கும் சிறுபான்மை இஸ்லாமியர்களின் கைகளில்தான் உள்ளது.
திங்கள், ஜனவரி 25, 2010
பாலாவுக்கு வாழ்த்து!


நான் கடவுள் படத்தின் இயக்குனர் பாலாவுக்கு தேசிய விருது! பாலா அடைந்த சந்தோஷத்தை விட எனக்கு கூடுதலாகவே இருந்தது.
நந்தா படம் பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளால், அந்த பாலா என்கிற இயக்குனர் அடுத்தடுத்து எடுக்கும் படங்களை எப்படியும் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தேன்.
ரௌத்ரம் பழகிய நாயகன் தாய்ப் பாசத்துக்காக ஏங்குவதும், இறுதியில் தாயின் கைகளால் தரப்படும் சாத்தத்தில் விஷம் கலந்திருப்பதை அறிந்தும், விரும்பி வாங்கி ஜனனம் தந்த தாயிடமே மரணத்தையும் வாங்குவது என்ற முடிவில் தன்முத்திரையை பதிய வைத்தார்.
சேது படம் அவரது இரண்டாவது இமாலய வெற்றி! படத்தின் முடிவில் கதைமாந்தனின் சித்தம் சரியாகிவிட்டதா? இல்லையா என்று நமது சிந்தைக்கு மட்டுமல்ல ஆறாம் அறிவர்களின் மனதையும் தட்டி எழுப்பியிருந்தார்.
பிதாமகன் - தன் நண்பனுக்காக விளிம்பு நிலை மனிதன் எடுக்கும் அவதாரம்.
நான் கடவுள் - வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்...
வாழ விடாதவர்களுக்கு நான் தரம் மரணம் தண்டனை...
கருத்தை மனதில் பதிய வைப்பதற்காக தேர்ந்தெடுத்த களம், கதாபாத்திரத்தின் தன்மை, காட்சியமைப்பு, முடிவு என்பவற்றுக்குள் இன்னொரு உலகம் என்று தமிழ் சினிமா உலகம் நுழையவே முயற்சிக்காத பயணத்துக்குள் புகுந்து எல்லையை கண்ட படம்.
பாலாவுக்கு விருது எனக்கு, உனக்கு ஒவ்வொரு தமிழனுக்கும், உண்மை சினிமா ரசிகனுக்கும் கிடைத்த விருது.
இன்னும் கலைப்பயணம் தொடரட்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)