துன்பியல் சம்பவத்தை மறக்க முயல்கிறேன் - மீடியா உலகம்
எதிர்பார்த்த பேட்டியில் புலித்தலைவர் பிரபாகரன், இந்தியப்
பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றது குறித்து கூறிய கூற்று மேற்கண்டது.இன்று மீண்டும் ஒரு துன்பியல் நிகழ்வை தமிழகத்தில் ஏற்படுத்தும்
நோக்குடனோ அல்லது தங்கள் பழிதீர்க்கும் படலத்தின் களமாய் தமிழகத்தை பயன்படுத்தும் நோக்குடனோ புலிகளின் செயல்பாடு அமைந்து வருவது உற்றுநோக்கத்தக்கது.சென்னையில் கைதான புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் நாதன் என்கிற சுருளி என்கிற தம்பித்துரை பரமேஸ்வரன் போலீஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில், இலங்கை தமிழ் தலைவர் வரதராஜ பெருமாள், டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது உதவியாளர் யோகராஜ் ஆகியோரை கொல்வதற்காக ததன அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் தங்கியிருக்கும் வரதராஜப் பெருமாளை அவரது மகள் திருமணத்தின்
போதும், டக்ளஸ் தேவானந்தா, யோகராஜ் ஆகியோர் தமிழகத்துக்கு வரும்போது கொலை செய்ய இருந்ததாகவும், அதற்கான கூட்டுசதிகள் நிறைவேற்றப்பட இருந்ததாகவும் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்கள் என்றாலே பாசம் காட்டி வரும் காரணத்தால் தமிழகத்தை தங்களின் கடத்தல் கேந்திரமாக புலிகள் ஆக்கிவருவதும், பண மோகம் காரணமாக சட்டமீறல்களை செய்யும் சிலரை துண்டுகோலாக்கி தமிழக இளைஞர்களை தங்களின் அத்துமீறலுக்கு பயன்படுத்தும் நோக்கம் இவர்கள் போலீஸாரால் கைது செய்யப்படும்போது நமக்கு விளங்குகிறது.
இன்று உலகளவில் தமிழினம் பெயர் பெறக்காரணமானவர்களில் புலிகள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழகத்தில் இவர்கள் மேற்கொள்ளும் ஒரு சில நடவடிக்கைகள் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி விடக்கூடுமோ என்ற அச்சம்தான் மேலோங்கி நிற்கிறது.
நிலம் நீச்சை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு உயிருக்காக தமிழகத்தில் அடைக்கலமாகும் நாடு புகுந்தோர்களுக்கும் புலித் தரப்பினரின் நடவடிக்கைகள் இன்னலை விளைவிப்பதாகத்தான் உள்ளது.
ஆனால் இதுவரை புலிகளின் தரப்பிலிருந்து தமிழக போலீஸாரால் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கோ, பரமேஸ்வரன் கைது தொடர்பாகவோ எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. அங்கு நிகழும் போர் காரணமாகவோ அல்லது உள்ளடி வேலைகளின் வினனயின் காரணமாகவோ விளக்கம் தெரிவிக்காமை இருக்கலாம் என்பது நம் எண்ணம்.
புலிகளின் மேல் தமிழர்கள் கொண்டுள்ள அன்பு நீடிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற சட்ட மீறல், அத்துமீறல் நிகழ்வுகளை நிச்சயமாக அவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்பது என்போன்ற பலரின் எண்ணம்.
வெள்ளி, ஜனவரி 25, 2008
பதில் சொல்லட்டும் புலிகள்!
சனி, ஜனவரி 19, 2008
ராம கிருஷ்ணா 'மட" மருத்துவமனை!
இது எந்த அமைப்புக்கும் எதிரான கருத்து அல்ல. ஒரு உண்மைச் சம்பவம்.
ராமகிருஷ்ணா மடம்! உலகெங்கும் பக்தர்களைக் கொண்டிருக்கும் உன்னதமான இந்த மடத்தின் சார்பில் பல்வேறு நலப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகிறார்கள் இந்த அமைப்பின் உதவியால்.
குறைந்த செலவில் தரமான சிகிச்சையை தரும் ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனையின் மூலம் சிகிச்சை பெற்றதால் நானும் பலனை அனுபவித்திருக்கிறேன்.
தினகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2004-ம் ஆண்டு என் உடல் உபாதைக்காக முதன் முறையாக மருத்துவ சிகிச்சை பெற்றேன். முதல் முறையாக மயிலாப்பூரில் ஆர்.கே. மடம் சாலையில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றேன். எப்படி மருத்துவச் சீட்டு போட வேண்டும் என்பது தொடங்கி, எந்த அறையில் மருத்துவரை பார்க்க வேண்டும், வரிசையில் மருந்துகள் பெற வேண்டும் என்று அங்கிருந்த மடத்தின் களப்பணியாளர்கள் கூறிய கூற்றுகள் நான் உடல் உபாதையிலிருந்து பாதி அளவு மீண்டதைப் போல் உணர்ந்தேன்.
அதே போன்று மருத்துவர்களைச் சந்தித்தேன். அவர்களும் இன்முகமாகப் பேசிய, நோயின் தன்மை அறிந்து மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டேன். முற்றிலுமாக குணமடைந்தேன்.
எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் ராமகிருஷ்ணா மடம் மருத்துவமனைக்கு செல்லுங்கள், அங்கு நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். குறைந்த கட்டணம்தான் என்று பாராட்டினேன்.
......
மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்றில் ஏற்பட்ட உபாதைக்காக பழைய நம்பிக்கையுடன் ராமகிருஷ்ணா மடம் மருத்துவமனையை அணுகினேன்.
நம்பிக்கை பழைமையாகி, நடைமுறைகள் புதுமையாகி விட்டது. களப்பணியாளர்கள் 'கடமை'க்காகப் பணியாற்றினார்கள்.
சந்தேகங்கள் கேட்டாலும் பதிலில் அலட்சியம் தென்பட்டது. புதிய மருத்துவர்கள் இருந்தனர். ஆனால் பழைய மருத்துவர்களைப் போல பரிவு காணப்படாவிட்டாலும் 'கடமை +' ஆகப் பணி செய்தார்கள். எனக்கு வயிற்று உபாதைக்காக ஸ்கேன் செய்யச் சொல்லியிருந்தார்கள்.
கட்டணம் கட்டினேன்.
'' மறுநாள் ஸ்கேன் செய்ய வேண்டும். காலை 10 மணிக்கு இரண்டு இட்லி சாப்பிடவேண்டும். 12 மணி வரை தண்ணீர் குடித்துக் சிறுநீர் கழித்துக் கொள்ளலாம். 12 மணி தொடங்கி 2 மணி வரை 15 டம்ளர் தண்ணீரைக்குடித்து கொண்டு மருத்துவமனைக்கு வரவேண்டும்.''
கட்டணம் கட்டிய இடத்தில் கூறப்பட்ட அறிவுரை.
சரியாக 2 மணிக்கு வந்தேன். தகவல் என்ற பலகை வைக்கப்பட்டிருந்த மேஜை காலியாக இருந்தது. வெளி வராண்டாவில் என்னைப் போல் இருந்தார்கள். ஸ்கேன் என்பது எனக்கு புதிதான நடைமுறை. கட்டணம் கட்டிய இடத்தில் இருந்த் ஒரு பெண்ணிடம் தகவல் கேட்டேன்.
''மேடம் ஸ்கேன் செய்ய வரச்சொல்லியிருந்தார்கள்...
எத்தனை மணிக்கு?
2 மணிக்கு மேடம்...
மணி எத்தனையாவுது....
2 மேடம்.
வெளியே நில்லு...
எதுக்காக மேடம்...
கேள்வி கேட்கக்கூடாது... சொன்னதைச் செய்...''- அவர்கள் இருக்கும் பணிநிலைக்கும், பேச்சுக்கும் சம்பந்தமேயில்லை.
(டாக்டர் வந்தபின் உள்ளே அழைப்பார்கள். வெளியே இருங்கள் என்றால் இருக்கப்போகிறோம். மனதுக்குள் முணுமுணுத்தபடி வெளியே வந்தேன்)
தண்ணீர் குடித்ததால் சிறுநீர் கழிக்க வேண்டிய அவஸ்தையில் இருந்தேன். என்னைப் போல் ஸ்கேன் செய்யவந்தவர்களும் இருந்தார்கள்.
(கண் பரிசோதனைக்கும் நிறைய பேர் வந்திருந்தார். அங்கிருந்த ஒரு நடுத்தர வயது களப்பணியாளர் அனைவரையும் போ, வா என்று ஒருமையில் கூறிக்கொண்டிருந்ததைப் பார்க்கையில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்வுகள் மனதுக்குள் வந்து சிரிப்பை மூட்டியது.)
சில நிமிடங்கள் கழிந்தன. உள்ளே அழைத்து பெஞ்சில் அமர வைத்தார்கள். வயது முதிர்ந்த பெண் களப்பணியாளர் வந்தார். ஸ்கேன் செய்வதற்கு முந்தைய நிகழ்வுகள் குறித்து சில தகவல்களைச் அமைதியாக எடுத்துக் கூறினார்.
மூன்று மணி நெருங்கிய பின்னர் பெண் மருத்துவர் வந்தார். அவரது 'கடமையை' செய்தார். மாலையிலேயே ஸ்கேன் முடிவுகளைக் கொடுத்தனர். அந்த முடிவுகள் குறித்து சொல்வதற்கு ஆள் இல்லை. மறுநாள் வந்து மருத்துவரை பார்க்க வேண்டும்.
மறு நாள் வந்தேன். மருத்துவரை சந்தித்தேன். ஸ்கேன் ரிசல்ட்டை கொடுத்தேன். படித்தார், வயிற்று வலிக்காக சென்றேன். ஸ்கேன் ரிசல்ட்டில் ஈரல்(லிவர்) பிரச்னை என்று காட்டியது. இதை உறுதி செய்வதற்காக மேலும் சில டெஸ்ட்டுகளை எடுக்கக் சொன்னார்கள் மருத்துவர்.
சரி அதையும் எடுத்துவிடுவோம் என்று மீண்டும் கட்டணம் கட்டும் இடத்தில் வரிசையில் நின்றேன்.
எனக்கு முன் ஒரு பெண். அவருக்கு முன் ஒரு ஆண், வயதான ஒரு பெண். வயதான பெண்ணிடம்
கட்டணம் கட்டும் இடத்தில் அவரிடம் விலாசம் கேட்டனர். சரிவர சொல்லத்தெரியாத அந்தப் பெண் வெளியில் நின்றிருந்த ஒரு பெண்ணை அழைத்தார். அவர் வந்து விலாசம் எழுதி வைத்திருந்த காகிதத்தை அந்த வயதான பெண்ணிடம் கொடுத்து விட்டு மீண்டும் வெளியில் சென்று விட்டார். இந்த இடைவெளியில் அந்த வயதா பெண்ணுக்கு அடுத்து நின்ற ஆண் சீட்டைக் கொடுத்துவிட்டார்.
அந்த வயதான பெண்ணை மீண்டும் வரிசையில் வரும்படி சொல்லி அனுப்பி விட்டனர். அவர் கூறியும் ஏற்கவில்லை. கேட்டால் பப்ளிக் பிகேவியர் என்று பதிலடி. விடாத அந்தப் பெண் அங்கிருந்த காவி சட்டையும், வேட்டியும் அணிந்திருந்த மடப் பணியாளரிடம் கேட்டும் அவரும் மீண்டும் வரிசையிலேயே வரச் சொல்ல அந்தப் பெண் செய்வதறியாது மீண்டும் வரிசையிலேயே சென்றுவிட்டார்.
இப்போது அந்த ஆண் கட்டணம் கட்டுகிறார். அடுத்தது என் முன் நின்ற பெண். அடுத்து நான். இதனிடையே கட்டணம் கட்டும் இடத்திலிருந்த மற்றொரு கவுண்டரில் கட்டணம் கட்ட வருமாறு அங்கிருந்த பெண் அழைத்தார்.
எனக்கு முன்னிருந்த பெண் செல்லவில்லை. நான் சென்று விட்டேன். ஆனால் என்னிடம் , அந்த எனக்கு முன்னிருந்த பெண்தான் வரவேண்டும் நீ ஏன் வந்தாய் என்று பணியிலிருந்த பெண் சொல்லியதோடு மீண்டும் வரிசையில் வா என்று அனுப்பி விட்டார்.
நான் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.
நான் மீண்டும் அந்தக் காவி உடை அணிந்திருந்தவரிடம் (அவரை சாது என்று அழைக்க எனக்கு மனம் வரவில்லை) சென்று நியாயம் கேட்டேன். பப்ளிக்கில் ஒழுங்காக பிகேவ் பண்ணு. வரிசையில் வா என்று கூறிவிட்டார்.
நான் நன்றி சொல்லிவிட்டு வெளியேறி விட்டேன். நியாயங்கள் எடுபடாத ராமகிருஷ்ணா மட மருத்துவம்னையிலா, மடத்திலா?
விடை தெரிந்தவர்கள் கூறுங்கள்.
ராமகிருஷ்ணா மடம்! உலகெங்கும் பக்தர்களைக் கொண்டிருக்கும் உன்னதமான இந்த மடத்தின் சார்பில் பல்வேறு நலப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகிறார்கள் இந்த அமைப்பின் உதவியால்.
குறைந்த செலவில் தரமான சிகிச்சையை தரும் ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனையின் மூலம் சிகிச்சை பெற்றதால் நானும் பலனை அனுபவித்திருக்கிறேன்.
தினகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2004-ம் ஆண்டு என் உடல் உபாதைக்காக முதன் முறையாக மருத்துவ சிகிச்சை பெற்றேன். முதல் முறையாக மயிலாப்பூரில் ஆர்.கே. மடம் சாலையில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றேன். எப்படி மருத்துவச் சீட்டு போட வேண்டும் என்பது தொடங்கி, எந்த அறையில் மருத்துவரை பார்க்க வேண்டும், வரிசையில் மருந்துகள் பெற வேண்டும் என்று அங்கிருந்த மடத்தின் களப்பணியாளர்கள் கூறிய கூற்றுகள் நான் உடல் உபாதையிலிருந்து பாதி அளவு மீண்டதைப் போல் உணர்ந்தேன்.
அதே போன்று மருத்துவர்களைச் சந்தித்தேன். அவர்களும் இன்முகமாகப் பேசிய, நோயின் தன்மை அறிந்து மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டேன். முற்றிலுமாக குணமடைந்தேன்.
எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் ராமகிருஷ்ணா மடம் மருத்துவமனைக்கு செல்லுங்கள், அங்கு நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். குறைந்த கட்டணம்தான் என்று பாராட்டினேன்.
......
மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்றில் ஏற்பட்ட உபாதைக்காக பழைய நம்பிக்கையுடன் ராமகிருஷ்ணா மடம் மருத்துவமனையை அணுகினேன்.
நம்பிக்கை பழைமையாகி, நடைமுறைகள் புதுமையாகி விட்டது. களப்பணியாளர்கள் 'கடமை'க்காகப் பணியாற்றினார்கள்.
சந்தேகங்கள் கேட்டாலும் பதிலில் அலட்சியம் தென்பட்டது. புதிய மருத்துவர்கள் இருந்தனர். ஆனால் பழைய மருத்துவர்களைப் போல பரிவு காணப்படாவிட்டாலும் 'கடமை +' ஆகப் பணி செய்தார்கள். எனக்கு வயிற்று உபாதைக்காக ஸ்கேன் செய்யச் சொல்லியிருந்தார்கள்.
கட்டணம் கட்டினேன்.
'' மறுநாள் ஸ்கேன் செய்ய வேண்டும். காலை 10 மணிக்கு இரண்டு இட்லி சாப்பிடவேண்டும். 12 மணி வரை தண்ணீர் குடித்துக் சிறுநீர் கழித்துக் கொள்ளலாம். 12 மணி தொடங்கி 2 மணி வரை 15 டம்ளர் தண்ணீரைக்குடித்து கொண்டு மருத்துவமனைக்கு வரவேண்டும்.''
கட்டணம் கட்டிய இடத்தில் கூறப்பட்ட அறிவுரை.
சரியாக 2 மணிக்கு வந்தேன். தகவல் என்ற பலகை வைக்கப்பட்டிருந்த மேஜை காலியாக இருந்தது. வெளி வராண்டாவில் என்னைப் போல் இருந்தார்கள். ஸ்கேன் என்பது எனக்கு புதிதான நடைமுறை. கட்டணம் கட்டிய இடத்தில் இருந்த் ஒரு பெண்ணிடம் தகவல் கேட்டேன்.
''மேடம் ஸ்கேன் செய்ய வரச்சொல்லியிருந்தார்கள்...
எத்தனை மணிக்கு?
2 மணிக்கு மேடம்...
மணி எத்தனையாவுது....
2 மேடம்.
வெளியே நில்லு...
எதுக்காக மேடம்...
கேள்வி கேட்கக்கூடாது... சொன்னதைச் செய்...''- அவர்கள் இருக்கும் பணிநிலைக்கும், பேச்சுக்கும் சம்பந்தமேயில்லை.
(டாக்டர் வந்தபின் உள்ளே அழைப்பார்கள். வெளியே இருங்கள் என்றால் இருக்கப்போகிறோம். மனதுக்குள் முணுமுணுத்தபடி வெளியே வந்தேன்)
தண்ணீர் குடித்ததால் சிறுநீர் கழிக்க வேண்டிய அவஸ்தையில் இருந்தேன். என்னைப் போல் ஸ்கேன் செய்யவந்தவர்களும் இருந்தார்கள்.
(கண் பரிசோதனைக்கும் நிறைய பேர் வந்திருந்தார். அங்கிருந்த ஒரு நடுத்தர வயது களப்பணியாளர் அனைவரையும் போ, வா என்று ஒருமையில் கூறிக்கொண்டிருந்ததைப் பார்க்கையில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்வுகள் மனதுக்குள் வந்து சிரிப்பை மூட்டியது.)
சில நிமிடங்கள் கழிந்தன. உள்ளே அழைத்து பெஞ்சில் அமர வைத்தார்கள். வயது முதிர்ந்த பெண் களப்பணியாளர் வந்தார். ஸ்கேன் செய்வதற்கு முந்தைய நிகழ்வுகள் குறித்து சில தகவல்களைச் அமைதியாக எடுத்துக் கூறினார்.
மூன்று மணி நெருங்கிய பின்னர் பெண் மருத்துவர் வந்தார். அவரது 'கடமையை' செய்தார். மாலையிலேயே ஸ்கேன் முடிவுகளைக் கொடுத்தனர். அந்த முடிவுகள் குறித்து சொல்வதற்கு ஆள் இல்லை. மறுநாள் வந்து மருத்துவரை பார்க்க வேண்டும்.
மறு நாள் வந்தேன். மருத்துவரை சந்தித்தேன். ஸ்கேன் ரிசல்ட்டை கொடுத்தேன். படித்தார், வயிற்று வலிக்காக சென்றேன். ஸ்கேன் ரிசல்ட்டில் ஈரல்(லிவர்) பிரச்னை என்று காட்டியது. இதை உறுதி செய்வதற்காக மேலும் சில டெஸ்ட்டுகளை எடுக்கக் சொன்னார்கள் மருத்துவர்.
சரி அதையும் எடுத்துவிடுவோம் என்று மீண்டும் கட்டணம் கட்டும் இடத்தில் வரிசையில் நின்றேன்.
எனக்கு முன் ஒரு பெண். அவருக்கு முன் ஒரு ஆண், வயதான ஒரு பெண். வயதான பெண்ணிடம்
கட்டணம் கட்டும் இடத்தில் அவரிடம் விலாசம் கேட்டனர். சரிவர சொல்லத்தெரியாத அந்தப் பெண் வெளியில் நின்றிருந்த ஒரு பெண்ணை அழைத்தார். அவர் வந்து விலாசம் எழுதி வைத்திருந்த காகிதத்தை அந்த வயதான பெண்ணிடம் கொடுத்து விட்டு மீண்டும் வெளியில் சென்று விட்டார். இந்த இடைவெளியில் அந்த வயதா பெண்ணுக்கு அடுத்து நின்ற ஆண் சீட்டைக் கொடுத்துவிட்டார்.
அந்த வயதான பெண்ணை மீண்டும் வரிசையில் வரும்படி சொல்லி அனுப்பி விட்டனர். அவர் கூறியும் ஏற்கவில்லை. கேட்டால் பப்ளிக் பிகேவியர் என்று பதிலடி. விடாத அந்தப் பெண் அங்கிருந்த காவி சட்டையும், வேட்டியும் அணிந்திருந்த மடப் பணியாளரிடம் கேட்டும் அவரும் மீண்டும் வரிசையிலேயே வரச் சொல்ல அந்தப் பெண் செய்வதறியாது மீண்டும் வரிசையிலேயே சென்றுவிட்டார்.
இப்போது அந்த ஆண் கட்டணம் கட்டுகிறார். அடுத்தது என் முன் நின்ற பெண். அடுத்து நான். இதனிடையே கட்டணம் கட்டும் இடத்திலிருந்த மற்றொரு கவுண்டரில் கட்டணம் கட்ட வருமாறு அங்கிருந்த பெண் அழைத்தார்.
எனக்கு முன்னிருந்த பெண் செல்லவில்லை. நான் சென்று விட்டேன். ஆனால் என்னிடம் , அந்த எனக்கு முன்னிருந்த பெண்தான் வரவேண்டும் நீ ஏன் வந்தாய் என்று பணியிலிருந்த பெண் சொல்லியதோடு மீண்டும் வரிசையில் வா என்று அனுப்பி விட்டார்.
நான் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.
நான் மீண்டும் அந்தக் காவி உடை அணிந்திருந்தவரிடம் (அவரை சாது என்று அழைக்க எனக்கு மனம் வரவில்லை) சென்று நியாயம் கேட்டேன். பப்ளிக்கில் ஒழுங்காக பிகேவ் பண்ணு. வரிசையில் வா என்று கூறிவிட்டார்.
நான் நன்றி சொல்லிவிட்டு வெளியேறி விட்டேன். நியாயங்கள் எடுபடாத ராமகிருஷ்ணா மட மருத்துவம்னையிலா, மடத்திலா?
விடை தெரிந்தவர்கள் கூறுங்கள்.
புதன், ஜனவரி 16, 2008
வசிப்பிடம்!
என்னை
நான்
சுவாசிக்கையில்
எனக்குள்
வசித்தவள்,
பெயர்ந்ததேன்
உன்னை
யாசிக்கையில்!
வசிப்பிடம்
மட்டுமே
நான்!
வாழ்விடம்
அவன்!
புரிந்தது உன்
புதுத்துவம்!
ஏமாளி நான்
என் எண்ணம்!
இல்லை...
காலத்தின்
பதில்!
அவன்
ஏமாற்றியதில்
பரத்தையாய் நீ!
கேள்விப்பட்டேன்...
தேடமுயலவில்லை!
உன் வசிப்பிடம்
காலியாய்
என்னுள்!
நான்
சுவாசிக்கையில்
எனக்குள்
வசித்தவள்,
பெயர்ந்ததேன்
உன்னை
யாசிக்கையில்!
வசிப்பிடம்
மட்டுமே
நான்!
வாழ்விடம்
அவன்!
புரிந்தது உன்
புதுத்துவம்!
ஏமாளி நான்
என் எண்ணம்!
இல்லை...
காலத்தின்
பதில்!
அவன்
ஏமாற்றியதில்
பரத்தையாய் நீ!
கேள்விப்பட்டேன்...
தேடமுயலவில்லை!
உன் வசிப்பிடம்
காலியாய்
என்னுள்!
புதன், ஜனவரி 09, 2008
எத்தனை எத்தனை சாமிகள்?
இந்த நிகழ்வில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே! உண்மையைத் தவிர வேறு வழியில்லை.
--------------
அம்மா நான் கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்.
எந்த கோயிலுக்கடி?
நம்ம மேடவாக்கம் மதுரை வீரன் சாமி கோயிலுக்குத்தான்!
அய்யோ வேனாண்டி! இப்பத்தான் அந்த சாமியாரு மூணாவதா ஒரு டாக்டரை கட்டிக்கிட்டு அங்க இங்கன்னு ஒரே பிரச்சினையாச்சு. இப்போது ஒரு வழியா அந்த டாக்டரு பொம்பள அவரை விட்டுட்டு போயிடுச்சு. அந்த ஆளையும் போலீஸ்ல புடிச்சுட்டு போயிட்டாங்க!
அம்மா நல்ல வேளை நீ சொன்ன. இல்லாட்டி நானும் போயி நாலாவதா போயிருக்க வேண்டியிருக்கும்.
(அட லூசு மகளே, ஏற்கனவே நான் ஏமாந்ததை எப்படிடி சொல்றது உங்கிட்ட.)
___________
யக்கா, இன்னனக்கு எங்கூட்டுக்கு அந்த சடாமுடி சாமியாரினி வர்றாங்கக்கா. வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போங்க.
எந்த சாமியாரினிடி!
அதாங்க அந்த மல்லிகா சாமியாரினி.
அட இவளே! சும்மா மல்லிகான்னு சொல்லாதடி, சயனைடு மல்லிகான்னு சொல்லு. இனத்துக்காகப் போராடி சாவுற புலிகளுக்கு அப்புறமா, பெண் இனத்தை சாகடிக்கிறதுக்காக அதிகமா சயனைடு யூஸ் பண்ணுனது இந்த மல்லிகா தாண்டி!
யக்கா என்னமோ சொல்லி பயங்காட்டுறீயேக்கா!
அட இவளே, அந்த பொம்பளையை பார்க்க கோயிலுக்கு போனவங்களுக்கு பிரசாதம் தர்றேன்னு சொல்லி சயனைடு கொடுத்து கொன்னுருக்காடீ. ஆறு, ஏழு பேரை சயனைடு கொடுத்தே காலி பண்ணிட்டு கம்பி நீட்டியிருக்கா. இப்ப கம்பி எண்ணிக்கிட்டிருக்கா. தெரியும்லா?
அப்படியாக்கா. நல்ல வேளை என்னைய காப்பாத்திப்புட்டீங்க.( அட இவளே சயனைடு மேட்டரை முன்னாடியே சொன்னாக்க எங்க மாமியாருக்கு எப்பவோ பிரசாதம் ரெடி பண்ணியிருப்பேனே!)
_____________
போலி சாமியார்களையும், சாமியாரிணிகளையும் நம்பி மோசம் போகும் நம்மவர்கள் இருக்கும் போது.... என்னத்த சொல்ல, இப்படி உண்மையக் கூட ஜோக்காக போடுறதுக்கு என்னமாதிரி ஆசாமி வந்துருவான்.!
--------------
அம்மா நான் கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்.
எந்த கோயிலுக்கடி?
நம்ம மேடவாக்கம் மதுரை வீரன் சாமி கோயிலுக்குத்தான்!
அய்யோ வேனாண்டி! இப்பத்தான் அந்த சாமியாரு மூணாவதா ஒரு டாக்டரை கட்டிக்கிட்டு அங்க இங்கன்னு ஒரே பிரச்சினையாச்சு. இப்போது ஒரு வழியா அந்த டாக்டரு பொம்பள அவரை விட்டுட்டு போயிடுச்சு. அந்த ஆளையும் போலீஸ்ல புடிச்சுட்டு போயிட்டாங்க!
அம்மா நல்ல வேளை நீ சொன்ன. இல்லாட்டி நானும் போயி நாலாவதா போயிருக்க வேண்டியிருக்கும்.
(அட லூசு மகளே, ஏற்கனவே நான் ஏமாந்ததை எப்படிடி சொல்றது உங்கிட்ட.)
___________
யக்கா, இன்னனக்கு எங்கூட்டுக்கு அந்த சடாமுடி சாமியாரினி வர்றாங்கக்கா. வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போங்க.
எந்த சாமியாரினிடி!
அதாங்க அந்த மல்லிகா சாமியாரினி.
அட இவளே! சும்மா மல்லிகான்னு சொல்லாதடி, சயனைடு மல்லிகான்னு சொல்லு. இனத்துக்காகப் போராடி சாவுற புலிகளுக்கு அப்புறமா, பெண் இனத்தை சாகடிக்கிறதுக்காக அதிகமா சயனைடு யூஸ் பண்ணுனது இந்த மல்லிகா தாண்டி!
யக்கா என்னமோ சொல்லி பயங்காட்டுறீயேக்கா!
அட இவளே, அந்த பொம்பளையை பார்க்க கோயிலுக்கு போனவங்களுக்கு பிரசாதம் தர்றேன்னு சொல்லி சயனைடு கொடுத்து கொன்னுருக்காடீ. ஆறு, ஏழு பேரை சயனைடு கொடுத்தே காலி பண்ணிட்டு கம்பி நீட்டியிருக்கா. இப்ப கம்பி எண்ணிக்கிட்டிருக்கா. தெரியும்லா?
அப்படியாக்கா. நல்ல வேளை என்னைய காப்பாத்திப்புட்டீங்க.( அட இவளே சயனைடு மேட்டரை முன்னாடியே சொன்னாக்க எங்க மாமியாருக்கு எப்பவோ பிரசாதம் ரெடி பண்ணியிருப்பேனே!)
_____________
போலி சாமியார்களையும், சாமியாரிணிகளையும் நம்பி மோசம் போகும் நம்மவர்கள் இருக்கும் போது.... என்னத்த சொல்ல, இப்படி உண்மையக் கூட ஜோக்காக போடுறதுக்கு என்னமாதிரி ஆசாமி வந்துருவான்.!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)