புதன், ஜூலை 23, 2008

அமாவாசையும், அப்துல் காதரும்.

அப்பாடா, ஒரு வழியா பிரதமர் மன்மோகன்சிங் அரசாங்கம் தப்பிச்சுட்டுது. அமெரிக்காவும், அனில் அம்பானியும் நிம்மதியாயிட்டாங்க.
அமெரிக்கா... அனில்....
இது என்னடா அமாவாசைக்கும், அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்.
முதல்ல அமெரிக்கா...
சோனியாவின் கைப்பாவை மன்மோகன்சிங் பிரதமரா இருக்கும்போதே, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டால் பிரச்னை இருக்காது.
இந்திய அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானால் கிட்டத்தட்ட வருஷத்துக்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் அமெரிக்காவுக்கு வருமானம்.
இந்தியா அணுகுண்டு சோதனை செய்யக்கூடாதுன்னு தடை விதிக்கக் கூடிய அளவுக்கு இலைமறை காயாக சில விதிகளை இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல்களால், இந்திய அணுகுண்டு தயாரிக்க முடியாது.
சீனாவை கண்ட்ரோல் பண்ணனும்னா அதுக்கான இறங்கு தளமா இந்தியாவை பயன்படுத்திக்கொள்ளலாம்னு ஒரு மாஸ்டர் பிளான்.(ஏற்கனவே பாகிஸ்தானுக்குள் தளம் அமைத்து அங்கே இருந்து நம்மை கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது தெரியும்)
இன்னும் என்னென்னவோ இருக்கு. இப்போதைக்கு போதும்.
மன்மோகன்சிங் காப்பாற்றப்பட்டதால அமெரிக்காவுக்கு லக்கு.
அடுத்து அனில் அம்பானி!
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. இங்க உடன்பிறப்புங்க சண்டையால இந்தியாவையே பிரிச்சி மேஞ்சிட்டு இருக்காங்க.
யார் பெரியவன்ங்கிற அதிகார ஈகோவால், மன்மோகன் அரசைக் காப்பாற்ற தன் அண்ணனை ஆளுமையைக் காலி பண்ணக் கோரியிருக்கிறார் அனில் அம்பானி. இவருக்கு ஆதரவா முலாயம் சிங்.
ஆதரவுக்கு அட்வான்ஸா முகேஷ் அம்பானி, தன் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த முன்னூறு கோடி ரூபாய் விமானத்தை அரசாங்கம் பறிமுதல் செஞ்சிருக்கு.
இப்போது ஜெயிச்சாச்சு. இனிமே முகேஷ் அம்பானியோட தொழில் நிலையங்கள் பாதிக்கப்படலாம்.
அனில் அம்பானி தன்னுடைய தகவல் தொடர்பு தொழில் விஷயத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கையில், முகேஷ் அம்பானி முட்டுக்கட்டை போட்டிருந்தார்.
இனிமே அப்படியிருக்காது. அனில் பையா, சும்மா சரமாரியா தொழிலில் புகுந்து லாபம் சம்பாதிக்கலாம்.

இப்போ தெரிஞ்சிருக்குமே அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம்.
என்ன ஒரு சின்ன வருத்தம்,, குதிரை பேரம் நடந்ததா சொல்றாங்க... ஆனால் பாராளுமன்ற வளாகத்துல நிறைய பச்ச கல்யாணிகள் இருந்ததா சொல்றாங்க

கருத்துகள் இல்லை: