அப்பா உங்கக் கூட நான் கொஞ்சம் பேசணும்...
கஷ்டப்பட்டு மகன் பேசிய வார்த்தைகள் அப்பாவின் முகத்தில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்பா.....அப்பா.... ஒரு நிமிஷம்பா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கப்பா...
திரும்பிப் பார்த்தவர் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்.
அப்பா... அப்பா... கத்தித் தீர்த்தான்...
பிரயோஜனமில்லை... அப்பாவின் பாதங்கள் படிதாண்டி பல அடிதூரத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது...
தொப்பென சாய்ந்தான் பக்கத்திலிருந்த ஷோபாவில்... கண்களில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் ... அயற்சியில் இமை மூடும்போது மெதுவாகக் கசிந்தது.
இப்ப அழு... போடா போ... நீயும் உன் கண்ணீரும்... காதுகளில் துல்லியமாகக் கேட்டது மனசாட்சியின் குரல்.
தப்பெல்லாம் உன் மேல வச்சிட்டு நீலிக் கண்ணீர் வடிக்காதடா?
கொஞ்சம் சுள்ளெனப் பட்டது...
நான் என்ன தப்பு செஞ்சேன்...
நீ என்ன தப்புதான் செய்யலை... வயசான மனுஷன்... எப்பவாவது அவரைப் பத்தி நீ நினைச்சிருக்கியா? அவர் என்ன செய்றாரு, எது பண்றாருன்னு என்னைக்காவது கேட்டிருக்கியா?
அவரைப் பத்தி நினைக்காமலா அவரு வசதிக்காக தனியா ரூம் கட்டிக் கொடுத்திருக்கேன். கட்டில், மெத்தை, டி.வி. ப்ரீட்ஜ்ன்னு எல்லா வசதியும் செஞ்சிருக்கேன். பேப்பர் கூட தினசரி அவருக்கு வந்துடுது. வாக்கிங் போறதுக்காக வீட்டைச் சுற்றியே கற்கள் பதிச்சி வெச்சிருக்கேன். வீட்டுல அவருக்கு டேஸ்ட் பத்தலைன்னதும் தினசரி பெரிய ஹோட்டல்லருந்து சாப்பாட்டை வரவச்சி குடுத்துட்டு இருக்கேன். அவருக்கு என்னென்ன வேணும்னு ஒவ்வொன்னா பார்த்து பார்த்து செஞ்சிட்டுதான வாரேன்.
போடா.... எப்பவாவது அவர் கூட உட்காந்து பேசியிருக்கிறியா? அவர் என்ன விரும்புனாருன்னு கேட்டுருக்கியா. அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டியா?
எனக்கு அதுகெல்லாம் ஏது நேரம்? நாலு கம்பெனி நடத்திக்கிட்டு வர்றேன். எப்போ பார்த்தாலும் பிசினஸ் பிசினஸ்னு பிஸியா இருக்குறேன். உண்மையா சொன்னா என் மனைவி மக்கள்ட்ட கூட எனக்குப் பேச நேரம் கிடைக்கிறதில்லை. ஆனாலும் அவங்களுக்கு தேவையானதை எல்லாம் செஞ்சுக்கிட்டிருக்கேன். இல்லேன்னா காச கொடுத்து அவங்களையே தேவையானதைச் செஞ்சுக்கச் சொல்லிடுறேனே...
வெறும் காசு மட்டும் மனித உறவுகளின் தேவைகளை தீர்மானிக்கிறதில்லை. அதையும் தாண்டி பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிறதிலயும், அடுத்தவங்களோட உணர்வுகளை புரிஞ்சிக்கிறதுலயும்தான் உண்மையான உறவுக்கான அர்த்தம் இருக்கு. இப்ப நீ கொடுக்கிற வசதிங்கிறது உன்னோட தரத்துக்காக நீ போட்டு வெச்சிருக்கிற அலங்கார மேடை. காசு கொடுத்து தங்க வைக்கும் முதியோர் இல்லத்துல இருக்கிற வசதிகளை நீயும் செஞ்சு கொடுத்திருக்க. ஆனால் முதியோர் இல்லத்துலயாவது ற மற்ற முதியோர்கிட்ட மனசு விட்டு பேச முயடியும். ஆனா இங்க அதுவும் கிடையாது. பிசினஸ்மேன் என்கிற வேஷத்தை உன்னுடைய பிசினஸ் அரங்கத்திலேயே வச்சிக்க. வீட்டுக்கு வந்தா ஒரு நல்ல மகனா, கணவனா, தந்தையா உனக்கான உறவின் அடையாளத்தை வெளிப்படுத்து.
ஆமாம், நான் என்னுடைய வேஷத்தை கண்டிப்பா கலைக்கணும். அப்பத்தான் உறவுகளின் கூடா நான் இருக்க முடியும்.
நானும் திருந்திட்டேன்.
.............அவன் வேகமாக எழவும் நாடக மேடையில் திரை விழுந்தது.
சொல்லிக் கொள்ள உறவுகள் இல்லாத அந்த நடிகனுக்கு பார்வையாளர்களின் கைத்தட்டல் ஓசை நெஞ்சை நிறைத்தது.
சனி, மார்ச் 20, 2010
புதன், மார்ச் 10, 2010
அப்பாவும் நானும்...
யாரும் எழுப்பாததே என்னை ஆச்சர்யமாக எழ வைத்தது.
விழித்த கண்களில் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை தன் அசைவுகளின் வழியாக பெரிய முள்ளும், சிரிய முள்ளும் கடிகாரத்துக்குள் காட்டிக் கொண்டிருந்தது. கூடகூடவே சிவப்பு கலர் வினாடி முள்ளும் படபடத்தது.
சூரியனுக்கு எப்போதுமே என்னைவிடச் சூட்டிப்பு ஜாஸ்திதான். எப்போதுமே என்னைவிட அதுதானே முதலில் எழுந்துவிடுகிறது.
கால்களை தரையில் வைத்தபோது உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது. தரையில் ஈரம் படர்ந்திருந்தது.
வெள்ளிக்கிழமை என்றாலே தரையைக் கூட்டிப் பெருக்கி வீட்டை கழுவிவிடுவது வாடிக்கை.
அன்றைக்கும் அறையை கழுவி விட்டுச் சென்றிருக்கிறார்கள்...
மெதுவாக ஈரத்தில் கால் பதித்து அறையை விட்டு வெளியே வந்தேன்.
அப்பாவின் அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. வேலைக்குப் போய்விட்டார்...
அப்பப்பபா...
இடி அமீன், ஹிட்லர், முசோலினி என ஒரு பெரிய சர்வாதிகார கும்பலே அப்பாவுக்குள் மொத்தமாய் குடியிருக்கிறது. அதைச் செய்யாதே, இதைச் செய்.... அதைத்தான் சாப்பிடனும்... நான் தர்ற டிரஸைத்தான் போடனும்... இன்னும் என்னெவெல்லாமோ..... தன் சுய ஆர்வத்தை, அதிகாரத்தை வீட்டில் ஒவ்வொருவர் மீதும் திணிப்பதிலே அவருக்கு ஒரு திருப்தி. நான் மட்டும் சம்பாதிச்சுக் கொண்டுவந்து கொட்டலேன்னா... அடுத்த வேளை பூவாவுக்கு கையைத்தான் ஏந்தணும்.... கான்வெண்ட்டுல மட்டும் இல்ல கவருமெண்ட் ஸ்கூல்ல கூட படிக்க முடியாது... இப்ப நீங்க இருக்கிற நல்ல நிலைமைக்காக நான் என்ன கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா? வழக்கமான அப்பாக்களின் வரிசையில் எனது அப்பா மட்டும் விதிவிலக்கா என்ன?....
வீடும் முக்கியமாக சமயலறை மட்டுமே அம்மாவின் சாம்ராஜ்யம். வாயில்லாப் பூச்சி... அப்பா வாங்கிக் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்தி சமைப்பதோடு, அவர் வாங்கித் தரும் துணிமணிகளை மட்டுமே கட்டிப்பார்ப்பவர். அவருக்கே அவருக்கான உணர்வுகள் உரிமைகள் என்று எதுவும் கிடையாது.
ஏம்மா இப்படி இருக்க... கொஞ்சமாவது உன்னோட ஆசைகளையும் அப்பாக்கிட்டச் சொல்லுமா? எப்படிம்மா அந்த பாடாவதி மாடல் புடவையைக் கட்டிக்கிட்டு இருக்கே... இப்போதான் புதுசு புதுசா சேலை டிசைனெல்லாம் வருதே அத வாங்கிக் கட்டிக்கிட்டா என்ன? இரும்மா நான் சம்பாதிக்கும் போது உனக்கு பட்டுப்புடவையா வாங்கிக் கொடுத்து ராணி மாதிரி பார்த்துப்பேன். வேலைக்கு எல்லாம் ஆளுதான்... பெருமையாக பீற்றிக் கொள்வேன்...
என்ன சொன்னாலும் சரி அம்மாவிடமிருந்து ஒரு புன்னகை மட்டும்தான் பதிலாக வரும்... அது அவரின் இயலாமையின் வெளிப்பாடா அல்லது என்னைப் பற்றிய பெருமிதமா அல்லது அப்பா குறித்தான நகையாடலா.... எனக்குத்தான் புரிபடவில்லை...
இப்போதும் அம்மா சமையலறைக்குள்... வெண்டைக்காயை நறுக்கிக் கொண்டிருக்கிறாள் ... தன் கணவருக்கு பிடித்த பொறியல் வைப்பதற்காக...
பிரஸில் டூத் பேஸ்ட்டை வைத்து வாய்க்குள் திணித்தவனாக பாத்ரூமுக்குள் செல்கிறேன்.
மணி பத்து... உடைகளை மாற்றிக் கொள்கிறேன்...
டைனிங் டேபிளில் இருந்த இட்லியை எடுத்துச் சாப்பிடுகிறேன்.
அம்மாவிடம் சொல்லிக் கொண்டு போக நினைத்து சமையலறைக்குள் நுழைந்தாள் அம்மா இல்லை. பாத்ரூமுக்குள் தண்ணீர் சத்தம்.
குளிக்கிறார்கள்...
அம்மா போய்ட்டு வருகிறேன்
பைக் சாவி நினைவு வந்து என் அறைக்குச் செல்கிறேன். அங்கு பைக் சாவி இல்லை. பைக்கிலேயே வைத்து விட்டோமோ...
வேகவேகமாக வெளியே வந்து பார்த்தேன். பைக்கை காணோம்.
அப்பா எடுத்துட்டுப் போகமாட்டார்... பைக்கை எங்கே... யோசித்துக் கொண்டிருக்கும் போதே
கொஞ்ச தூரத்தில் அப்பா வந்து கொண்டிருந்தார்.
இன்னைக்கு வேலைக்குப் போகலையா?
அப்பாவுக்கு பின்னால் ஒரு மெக்கானிக். அவர் என் பைக்கை தள்ளிக் கொண்டு வந்தார்.
அப்பா எப்போ என் பைக்கை...
அம்மாவும் வாசலுக்கு வந்துவிட்டார்.
ஏம்மா என் பைக்கை அப்பா கொண்டுட்டு வர்றார்.
என் கேள்விக்கு அம்மாவிடமிருந்து விடையில்லை. அவர் முகத்தில் மெல்லிய சோகம்.
பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு மெக்கானிக் போய்விட்டார்.
அப்பா, அம்மாவின் முதுகில் கை வைத்தபடி மெதுவாக வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தார்.
அப்பா என்னாச்சு என் பைக்குக்கு... அப்பா.... அம்மா... என் கதறல் அவர்களை ஒன்றுமே செய்யவில்லை.
மெதுவாக பூஜை அறைக்குள் அம்மாவுடன் நுழைந்தார் அப்பா...
ஓடிச் சென்று எட்டிப்பார்த்தேன்.
அம்மாவின் மடியில் குழந்தை போல அப்பா அழுது கொண்டிருந்தார். எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன். எம்புள்ளைமே்ல என்னையவிட அதிகமா யாருடி அக்கறையும் பாசமும் காட்டமுடியும்................ இன்னும் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருந்தார்.
குலுங்கி அழுத அப்பாவை பார்ப்பதை விட அதிர்ச்சியாயிருந்தது நிமிர்ந்து பார்த்தபோது என் போட்டோவுக்கு மாலை போடப்பட்டிருந்தது!
விழித்த கண்களில் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை தன் அசைவுகளின் வழியாக பெரிய முள்ளும், சிரிய முள்ளும் கடிகாரத்துக்குள் காட்டிக் கொண்டிருந்தது. கூடகூடவே சிவப்பு கலர் வினாடி முள்ளும் படபடத்தது.
சூரியனுக்கு எப்போதுமே என்னைவிடச் சூட்டிப்பு ஜாஸ்திதான். எப்போதுமே என்னைவிட அதுதானே முதலில் எழுந்துவிடுகிறது.
கால்களை தரையில் வைத்தபோது உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது. தரையில் ஈரம் படர்ந்திருந்தது.
வெள்ளிக்கிழமை என்றாலே தரையைக் கூட்டிப் பெருக்கி வீட்டை கழுவிவிடுவது வாடிக்கை.
அன்றைக்கும் அறையை கழுவி விட்டுச் சென்றிருக்கிறார்கள்...
மெதுவாக ஈரத்தில் கால் பதித்து அறையை விட்டு வெளியே வந்தேன்.
அப்பாவின் அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. வேலைக்குப் போய்விட்டார்...
அப்பப்பபா...
இடி அமீன், ஹிட்லர், முசோலினி என ஒரு பெரிய சர்வாதிகார கும்பலே அப்பாவுக்குள் மொத்தமாய் குடியிருக்கிறது. அதைச் செய்யாதே, இதைச் செய்.... அதைத்தான் சாப்பிடனும்... நான் தர்ற டிரஸைத்தான் போடனும்... இன்னும் என்னெவெல்லாமோ..... தன் சுய ஆர்வத்தை, அதிகாரத்தை வீட்டில் ஒவ்வொருவர் மீதும் திணிப்பதிலே அவருக்கு ஒரு திருப்தி. நான் மட்டும் சம்பாதிச்சுக் கொண்டுவந்து கொட்டலேன்னா... அடுத்த வேளை பூவாவுக்கு கையைத்தான் ஏந்தணும்.... கான்வெண்ட்டுல மட்டும் இல்ல கவருமெண்ட் ஸ்கூல்ல கூட படிக்க முடியாது... இப்ப நீங்க இருக்கிற நல்ல நிலைமைக்காக நான் என்ன கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா? வழக்கமான அப்பாக்களின் வரிசையில் எனது அப்பா மட்டும் விதிவிலக்கா என்ன?....
வீடும் முக்கியமாக சமயலறை மட்டுமே அம்மாவின் சாம்ராஜ்யம். வாயில்லாப் பூச்சி... அப்பா வாங்கிக் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்தி சமைப்பதோடு, அவர் வாங்கித் தரும் துணிமணிகளை மட்டுமே கட்டிப்பார்ப்பவர். அவருக்கே அவருக்கான உணர்வுகள் உரிமைகள் என்று எதுவும் கிடையாது.
ஏம்மா இப்படி இருக்க... கொஞ்சமாவது உன்னோட ஆசைகளையும் அப்பாக்கிட்டச் சொல்லுமா? எப்படிம்மா அந்த பாடாவதி மாடல் புடவையைக் கட்டிக்கிட்டு இருக்கே... இப்போதான் புதுசு புதுசா சேலை டிசைனெல்லாம் வருதே அத வாங்கிக் கட்டிக்கிட்டா என்ன? இரும்மா நான் சம்பாதிக்கும் போது உனக்கு பட்டுப்புடவையா வாங்கிக் கொடுத்து ராணி மாதிரி பார்த்துப்பேன். வேலைக்கு எல்லாம் ஆளுதான்... பெருமையாக பீற்றிக் கொள்வேன்...
என்ன சொன்னாலும் சரி அம்மாவிடமிருந்து ஒரு புன்னகை மட்டும்தான் பதிலாக வரும்... அது அவரின் இயலாமையின் வெளிப்பாடா அல்லது என்னைப் பற்றிய பெருமிதமா அல்லது அப்பா குறித்தான நகையாடலா.... எனக்குத்தான் புரிபடவில்லை...
இப்போதும் அம்மா சமையலறைக்குள்... வெண்டைக்காயை நறுக்கிக் கொண்டிருக்கிறாள் ... தன் கணவருக்கு பிடித்த பொறியல் வைப்பதற்காக...
பிரஸில் டூத் பேஸ்ட்டை வைத்து வாய்க்குள் திணித்தவனாக பாத்ரூமுக்குள் செல்கிறேன்.
மணி பத்து... உடைகளை மாற்றிக் கொள்கிறேன்...
டைனிங் டேபிளில் இருந்த இட்லியை எடுத்துச் சாப்பிடுகிறேன்.
அம்மாவிடம் சொல்லிக் கொண்டு போக நினைத்து சமையலறைக்குள் நுழைந்தாள் அம்மா இல்லை. பாத்ரூமுக்குள் தண்ணீர் சத்தம்.
குளிக்கிறார்கள்...
அம்மா போய்ட்டு வருகிறேன்
பைக் சாவி நினைவு வந்து என் அறைக்குச் செல்கிறேன். அங்கு பைக் சாவி இல்லை. பைக்கிலேயே வைத்து விட்டோமோ...
வேகவேகமாக வெளியே வந்து பார்த்தேன். பைக்கை காணோம்.
அப்பா எடுத்துட்டுப் போகமாட்டார்... பைக்கை எங்கே... யோசித்துக் கொண்டிருக்கும் போதே
கொஞ்ச தூரத்தில் அப்பா வந்து கொண்டிருந்தார்.
இன்னைக்கு வேலைக்குப் போகலையா?
அப்பாவுக்கு பின்னால் ஒரு மெக்கானிக். அவர் என் பைக்கை தள்ளிக் கொண்டு வந்தார்.
அப்பா எப்போ என் பைக்கை...
அம்மாவும் வாசலுக்கு வந்துவிட்டார்.
ஏம்மா என் பைக்கை அப்பா கொண்டுட்டு வர்றார்.
என் கேள்விக்கு அம்மாவிடமிருந்து விடையில்லை. அவர் முகத்தில் மெல்லிய சோகம்.
பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு மெக்கானிக் போய்விட்டார்.
அப்பா, அம்மாவின் முதுகில் கை வைத்தபடி மெதுவாக வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தார்.
அப்பா என்னாச்சு என் பைக்குக்கு... அப்பா.... அம்மா... என் கதறல் அவர்களை ஒன்றுமே செய்யவில்லை.
மெதுவாக பூஜை அறைக்குள் அம்மாவுடன் நுழைந்தார் அப்பா...
ஓடிச் சென்று எட்டிப்பார்த்தேன்.
அம்மாவின் மடியில் குழந்தை போல அப்பா அழுது கொண்டிருந்தார். எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன். எம்புள்ளைமே்ல என்னையவிட அதிகமா யாருடி அக்கறையும் பாசமும் காட்டமுடியும்................ இன்னும் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருந்தார்.
குலுங்கி அழுத அப்பாவை பார்ப்பதை விட அதிர்ச்சியாயிருந்தது நிமிர்ந்து பார்த்தபோது என் போட்டோவுக்கு மாலை போடப்பட்டிருந்தது!
வியாழன், மார்ச் 04, 2010
நான் மகான் அல்ல!

ஒருத்தன் வேணும்னா அவனைத் தாங்குறதும், வேண்டாம்னா பொத்துன்னு தூக்கி கீழப் போடுறதும் மனித இயல்பு. ஒருத்தன் மேல அவன் நல்லவன்னு நம்பிக்கை வச்சி வாழ்த்துறதும், அவனோட தப்பான சகவாசம் எப்போவாவது தெரியவந்துச்சுன்னா ச்சீய்... அவனப் போயா இவ்வளவு நாளா நம்பிக்கை வெச்சிருந்தோம்னு தனது நம்பிக்கை தவறானதை ஏற்கமுடியாத கோபத்தை அவன் மீது காட்டுவதும் கூட மனித இயல்புதான் போலும்.... சமீபத்தில் ஊடகங்களால் பரவலாக கடை விரிக்கப்பட்ட சுவாமி நித்யானந்தா விவகாரமும் இப்படித்தான்.
சிறுவயதிலேயே துறவறத்தை மேற்கொண்டு உபதேசங்களை வழங்கியும், யோகாசனங்களை செய்யச் சொல்லியும், மனதை ரிலாக்ஸாக்கும் சில பல நூல்களை வெளியிட்டும் தன் பெயரையும், பேங்க் பேலன்ஸையும் சொத்துக்களையும் குவித்து கொண்டவர் இந்த நித்தியானந்தா.
தனக்கான ஆறுதல் வார்த்தைகளை, தன் உள்ளத்துக்கான அமைதியை தேடும் சிலர், பலருக்கு அந்த ஆறுதல் வார்த்தைகளை, அமைதியை தருபவன் தெய்வமாக, தன்னை வழிநடத்துபவனாக தெரிவதில் ஆச்சர்யமில்லை. அந்த நியதியில்தான் நித்தியானந்தாவின் வார்த்தைகளும், போதனைகளும் தனக்கான வழிகாட்டுதலாக நினைத்தவன் அவரை தெய்வமாக்கிக் கொண்டான்.
தன்னை தெய்வமாக்கிக் கொண்ட பக்தனிடமிருந்து காணிக்கையாக பெற முடிந்ததையெல்லாம் பெற்ற நித்தியானந்தாவுக்கு சொத்துக்கள் குவிந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை.
நேர்மை, நீதி, நியாயம், சத்தியம், தர்மம் என்று ஊருக்கு உபதேசம் சொன்னவரை கடவுளாகப் பார்த்தவன், உபன்னியாசத்தை மட்டும் பார்க்காமல் அவருக்குள்ளும் ஊடுருவிப் பார்த்தபோது தெரிந்ததுதான் அவரது மறுபக்க லீலைகள்.
தன்னை நித்தியானந்தா பாலியல் வல்லுறவு கொண்டதாக இன்னும் யாராலும் புகார் தரப்படவில்லை. லீலையில் இருந்ததாக கூறப்பட்ட நடிகை ரஞ்சிதாவும், தன் கடவுளுக்கு தன்னையே காணிக்கையாக்கியதாக ஒப்புக் கொண்டு விட்டார்.
.............. ஆஹா ஓஹோ என்று நித்தியானந்தாவைப் தூக்கி வைத்தவர்கள் இன்று தொப்பென்று போட்டுவிட்டு ஆங்காரம் காட்டுகிறார்கள்.
காவி உடையில் சன்னியாசம் பேணும் ஒருவர், துறவி என்று முற்றும் துறந்தவராகக் காட்சி அளித்தவரின் இந்த செயல் அருவருப்பானதே. தன் மீதான பக்தர்களின் நம்பிக்கையைத் தகர்த்த செயல் தவறானது.
முற்றும் துறக்கவில்லை, இன்னும் சில இன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்றால் துறவறத்தை கைவிட்டு இல்லறத்தை மேற்கொண்டு கல்கி(?) சாமியார் போல் கணவன் மனைவியாக சமயச் சொற்பொழிவைத் தொடரலாம்..... சொத்து பத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ளலாமே...
இன்னொரு விஷயம்:
அமெரிக்காவில் தன்மனித ஒழுக்கம் சரியாக இல்லாவிட்டாலும் தங்களுக்கு தலைமையாக வருபவர் ஒழுக்கமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் இந்தியாவிலோ தனிமனித ஒழுக்கம் மட்டுமே முக்கியம், தலைமை எப்படியும் இருக்கலாம் என்னும் மனோபாவமே இருக்கிறது. இதனால்தான் தான் நேர்மையாக இருந்தாலும் தான் தேர்ந்தெடுக்கும் தலைமை - ஆன்மீகமானாலும் சரி, அரசியல் ஆனாலும் சரி அவர்களின் ஒழுக்கங்களை பார்ப்பதில்லை.
எப்படி மனித வாழ்வை ஆன்மிகம் நல்ல வழிக்கு திருப்புகிறதோ அவ்வாறே அரசியலும் நல்ல நெறியில் நடத்த வேண்டும். ஆனால் இங்கு ஆன்மிகமும் சரியில்லை, அரசியலும் சரியில்லை... நல்லக்கூத்து நடக்குது இந்தநாட்டில்...........
லேபிள்கள்:
சமூகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)