பிரபாகரன் - உலகத் தமிழர்களின் ஒரே உயிரெழுத்து. ஆனால் உயிருடன் இருக்கிறாரா? உலகத் தமிழர்களின் வாதமும் இதுதான்.
இருக்கலாம் என்பதற்காக பல்வேறு இதழ்களின் சான்றுகள்!
* பிரபாகரனின் சடலம் என்று இலங்கை அரசு வெளியிட்ட படங்கள் அவர்தான் என்பதை மெய்ப்பிக்க வில்லை.
ஒருபடத்தில் கண்கள் நிலைகுத்தி நிற்கிறது, மற்றொன்றில் மூடியிருக்கிறது, ஒன்றில் வாய் பிளந்திருக்கிறது, மற்றதில் வாய் மூடியிருக்கிறது. ஒன்று முகத்தில் முன்று நாள் தாடிக்கான நிலை உள்ளது, மற்றதில் முகம் வழுவழுவென்று இருக்கிறது.
உள்ளாடை தொடர்பான படத்திலும் நிற வேறுபாடு காணப்படுகிறது. உருவ அமைப்பில் சற்றேறக்குறைய பிரபாகரனைப் போல் காணப்பட்டாலும் தேக்கட்டுகளில் பிரபாகரனின் தாக்கம் இல்லை.
* கொல்லப்பட்டது குறித்து அரசின் தகவல்களும் முழுமையானதாக, நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை.
இரண்டு நாள் முன்பே கொல்லப்பட்டதாகவும், கடலுக்குள் தப்பிக்கையில் கொன்றதாகவும் கூறியவர்கள், மறுபடி கூறுகையில் மாற்றிக் கூறியிருக்கிறார்கள்.
* அதிபர் கூட்டிய மந்திரிசபை கூட்டத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பது தொடர்பாக எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
*இந்தியாவுக்கு தரப்பட்ட பிரபாகரன் இறப்பு சான்றிதழின் தன்மை குறித்து இந்திய அரசு பத்திரிகைகளுக்கு அதன் நகல் பிரதி எதையும் வெளியிட வில்லை.
* இந்திய அரசால் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறி ராஜீவ்காந்தி கொலைவழக்கு விசாரணையிலிருந்து பிரபாகரன் பெயர் நீக்கப்பட்ட்தாக எந்த அறிவிப்பையும் வெளியிட இயலவில்லை.
இதையும் மீறி பொட்டு அம்மான் போன்ற பாதுகாக்கும் தலைவர்கள் பிரபாகரனை கண்டிப்பாக போருக்கு பலியிட்டிருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
இதனால் புலித்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைத்துக் கொள்வோம்.