சென்னை தொலைபேசியின் (பி.எஸ்.என்.எல். சென்னை)இணைய வசதி வேண்டுமா --- இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் மட்டும் போதும். எங்களது ஆட்கள் உங்களைத் தேடிவந்து இணைய வசதி செய்து கொடுப்பார்கள்.
------------- பி.எஸ்.என்.எல். தொலைபேசியிலிருந்து அடிக்கடி வந்து விழும் குறுஞ்செய்தி இது. மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லாமல் சேவை செய்யும் பி.எஸ்.என்.எல்.லுக்கு சல்யூட் வைக்கும் அதே நேரத்தில் அவர்களது பழுதுநீக்கும் சேவை என்பதோ, வாடிக்கையாளர் சேவை மையத்தின் சேவை என்பதோ மிகவும் தாமதமாகவே நிகழ்ந்து வருகிறது.
எனது இல்லம் இருக்கும் நீலாங்கரை பாரதியார் நகரில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை என்பது சுமாராகத்தான் உள்ளது. சுமார் ஐம்பது இணைப்புகள் இருக்கும் எமது பகுதியில் அந்த இணைப்புகளின் வயர் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து துருபிடித்து உள்ளது. இரைச்சல் இல்லாமல் பேச்சு என்பது சாத்தியமில்லை.
இணையத்தின் இணைப்பும் சரிவர இல்லை. இரைச்சல் இருப்பதால் மோடம் ஆன் செய்யப்பட்டும், டி.எஸ்.எல். மற்றும் இண்டர் நெட் விளக்குகள் பளிச்சிடுவதற்கு நேரமாகி விடுகிறது.
அப்படியே இணைப்புக் கிடைத்தாலும் யாருடனாவது ஆன்லைனில் பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது மெயில்கள் அனுப்பிக் கொண்டிருக்கும்போதோ இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. மீண்டும் இணைப்பு ஏற்படுவதற்குள் நமக்கு வெறுப்பு வந்து கணினியை நிறுத்திவிட்டுப் போக வேண்டியதாகி விடுகிறது.
என்னைப் போல் குறிப்பிட்ட அளவுக்கான சேவையை மட்டும் பயன்படுத்தும் நபர்கள் இதனால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியுள்ளது.
அன்றொரு மழைநாள் இரவில் அவசரமாக அலுவலகத்துக்கு செய்தி அனுப்ப வேண்டியிருந்தது. கணினியை இயக்கி இணைய இணைப்பை ஏற்படுத்தினால் சுத்தம்........... எப்படியோ டி.எஸ்.எல். விளக்கு மட்டும் ஒளிர்ந்தது. இண்டர் நெட் விளக்கு எரியவில்லை. 1500க்கு போன் போட்டேன். உங்களுக்கு உதவ எங்கள் ஆபரேட்டர் இருக்கிறார்............. உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது............. இதே வரிகள் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. நானும் சுமாரர் இருபத்தேழு நிமிடங்கள் ரிசீவரை கீழே வைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
வாடிக்கையாளர் சேவைமையத்தால் நொந்துபோனேன். எனக்குத் தெரிந்த ஒரு பி.எஸ்.என்.எல். அதிகாரிக்கு போன் செய்து அவசரத்தைச் சொன்னேன். அவர் தனக்கு தெரிந்த வரிடம் பேசச் சொல்ல, அவரது வழிகாட்டுதல் படி சில விஷயங்களைச் செய்து எப்படியோ இணையத் தொடர்பை ஏற்படுத்தி செய்தியை அனுப்பிவிட்டேன்.
தெரிந்தவர் இருக்கப்போய் முடிந்தது... இல்லாவிட்டால் அதற்கு புகார் செய்ய வேண்டும். புகார் வந்து பார்க்க வருவதற்குள் இரண்டு நாட்கள் ஆகிவிடும். புகார் சரிசெய்ய வந்தவருக்கு குறைந்தது ஐம்பது ரூபாயாவத் கொடுக்க வேண்டும்...................
கொடுக்கப்பட்ட இணைப்புகளை நல்லமுறையில் பராமரியுங்கள். நாங்களே புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துவிடுவோம்.
செய்வார்களா பார்ப்போம். கேபிள் இணைப்பின் படத்தையும் பிறகு பதிவேற்றுகிறேன்.