உனக்குத் தெரியாம நான் என்ன செய்யமுடியும் சொல்லு? என்னமோ பெரிய நீதிமானாட்டமா இப்ப கேள்வி கேட்கிற.
பஸ்ல வரும்போது அந்த வெள்ளக்காரிய கூட்டத்துல இடிக்கச் சொன்னது நீதான். அப்படி இடிக்கும் போது பிக்பாக்கெட்னு அவ கத்தி நான் அறை வாங்கும்போது, யாருக்கோ வந்த வினைன்னு சும்மா இருந்துக்கிட்டு சும்மா பொளந்து கட்டுன பிறகு மாறிக்கடான்னு சமாதானம் சொன்ன.
சரி நீ இவ்வளவு நல்லவனாடான்னு நெனைக்கும் போதே, அந்த ஐஸ்க்ரீம் பார்லர்ல ஆண்ட்டி உட்காந்து சாப்பிடுறத பாக்க வச்சி ஜொல்லு வடிய வச்ச.
சரி, வேணாம்னு நான் ஒதுங்கினாலும், அதான் அடியெல்லாம் வாங்கியாச்சே, பின்ன ஏன் நல்லவன் வேஷம் போடுறன்னு கேள்வி கேட்ட....
ஆபிஸ்ல நான்பாட்டுக்கு வேலை பார்த்துட்டு இருந்தாலும் ,போய் அந்த ரிசப்ஷனிஸ்ட் இப்பத்தான் வந்திருக்கா! போய் ஒரு குட்மார்னிங் சொல்லிட்டு சிங்கிள் லுக் விட்டுட்டு வாப்பான்னு உசுப்பேத்துற.
ஆனா நான் போறதுக்குள்ள எப்படா, அவ வருவான்னு வந்த உடனே போய் குட்மார்னிங் சொல்றதுக்கு ஒரு கும்பலே அடிச்சுக்குது. எல்லாம் அவ மச்சம் இருக்குற இடம்தான் காரணம்.
வேலை விட்டு போகும்போதாவது ஒழுங்கா , ஆபீஸ் பிரண்டு வண்டியில போலாம்னா, அந்த டைபிஸ்ட போற பஸ்சுல ஏறி ஒரு , லுக் உட சொல்ற.
அந்த நேரத்துல நீ சொல்றது ரொம்ப நல்லா இருக்கிறதால நானும் ஏற, அவ வீட்டுக்காரணும் அதே பஸ்ல ஏறி வரணுமா. அவ என்னைய நோக்கி புருஷன்கிட்ட கையக் காட்ட அதிர்ச்சியில சிக்னல்லயே இறங்கி வேற பஸ்ச பிடிச்சி வீட்டுக்கு போயிட்டேன். ஆனா அடுத்த நாள் காலையில பாத்தா டைபிஸ்ட் எங்கிட்ட வந்து, என் புருஷன் கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டிருக்கும்போதே இறங்கி போயிட்டீங்களேன்னு ஒரு பற்பசை சிரிப்பு சிரிச்சுவைக்க நான் என்னத்த சொல்ல...
எப்படிடா உன்ன வச்சிட்டு நான் சமாளிக்கப்போறேன்.... கண்ணாடியில் தெரிஞ்ச மனசாட்சிக்கிட்ட ஒப்பாரி வச்சிட்டு இருந்தான் அந்தப் பயபுள்ள.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக