தமிழகத்தையே கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக உலுக்கிப் போட்டு வருகிறது போலி மருந்து விவகாரம்...
காலாவதியாகி குப்பைக்கு அனுப்பப்பட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்துவந்து புதிய உறைகள், லேபில் இட்டு மறுபடியும் விற்பனைக்கு அனுப்புவது,
விலை மலிந்த மருந்துகளை வாங்கி அதே தரத்தில் விலை கூடுதலான மருந்துகளின் லேபிள்களை ஒட்டி கூடுதல் விலைக்கு விற்பது,
ஏதோ ஒரு பொருளை மாத்திரை என்ற பெயரில் விற்பனைக்கு அனுப்பி விடுவது...
இப்படியான வழிகளில் இன்று போலியான, காலாவதியான மருந்து மாத்திரைகள் நம் பாவனைக்கு வந்து நம்மை திகில் கிளப்பி விட்டிருக்கின்றன.
கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் பாணியில்... அரசின் நடவடிக்கைகள் தற்போது தூண்டிவிடப்பட்டு மருந்து கடைகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் என ஆங்காங்கே அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காலாவதியான, போலியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன.
மீனாட்சி சுந்தரம், சஞ்சய் குமார் உள்பட சுமார் எட்டுக்கும் மேலானோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளன. தேடுதல் வேட்டை இன்னும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
நிற்க...
ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீ விபத்து, கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் பலியானது ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்தே கல்யாண மண்டபங்கள் அமைப்பதற்கு விதி வகுக்கப்பட்டது. கூரைக் கொட்டகைப் பள்ளிகளுக்கு தடை விதித்து திருத்தப்பட்டது.
எல்லாம் நடந்து உயிர்கள் பல பலியான பின்னரே அரசு சக்கரம் முடுக்கிவிடப்படுகிறது. அதற்கு முன்பாக பள்ளிக்கூடம், கல்யாண மண்டபங்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதே போல்தான் இன்று போலி மருந்து விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. யானைக் கவுனியில் சிறுமி ஒருவர் காலாவதியான மருந்து உட்கொண்டு மரணமடைந்த செய்தி பரபரப்பான போதே அரசு சக்கரம் தன் ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்தால் இதுபோல் உயிர்களோடு விளையாடும் இந்த உன்மத்தர்களை கண்டறிந்து மக்கள் அரங்கில் நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் அரசு அதிகாரிகளுக்கு போகவேண்டியது போய்க் கொண்டே இருந்தால் யார்தான் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள். ஏதாவது நிகழ்ந்து விட்டால் உடனே எங்களிடம் அலுவலர்கள் இல்லை, அது இல்லை, என்று நொட்டை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்...
சரிப்பா இப்பவாவது நடவடிக்கை எடுக்கிறீங்களே நன்றி!
இப்ப நடவடிக்கையை அப்படியே மெடிக்கல் பீல்டுல மட்டும் காட்டிட்டு இருக்காதீங்க. இதோ இன்னும் ரெண்டு மாசத்துல புதிய கல்வியாண்டு பிறக்குது. தங்கள் பிள்ளைகளை புதுசா கல்விநிலையத்துல சேர்ப்பாங்க.
நாங்கதான் தரமான கல்வி தாரோம், எங்கக்கிட்டதான் எல்லா வசதியும் இருக்கு, புது பில்டிங்கெல்லாம் கட்டிருக்கோம் அதனால டொனேஷனா ஒரு இருபத்தைந்தாயிரத்தை வெட்டுங்க என்று எல்.கே.ஜி.க்கே டிமாண்ட் வைக்கும் தனியார் பள்ளிக்கூடங்கள் பக்கமும் பார்வை வலையை விரிங்க. அரசு பள்ளிகளும் நல்லபடியா கல்வி தருவாங்கன்னு மக்கள் சொல்ற அளவுக்கு அவுகளையும் தரம் உயர்த்துங்க...
அப்புறம் இன்னொன்னு... ஏம்பா இந்த சாமியார் படுத்தார்னு செருப்பால அடிச்ச மக்கா, நம்ம உயிருக்கே கொல்லி வைக்கிற அளவுக்கு போலி மாத்திரையெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கான். அவன்கிட்டயும் கொஞ்சம் பாய்வோமா?
2 கருத்துகள்:
//ஏம்பா இந்த சாமியார் படுத்தார்னு செருப்பால அடிச்ச மக்கா, நம்ம உயிருக்கே கொல்லி வைக்கிற அளவுக்கு போலி மாத்திரையெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கான். அவன்கிட்டயும் கொஞ்சம் பாய்வோமா?//
கண்டிப்பா..
உங்களின் ஆக்கம் அருமை....
anna intha idukaikal yallam engirunthu kidaikuthu
கருத்துரையிடுக