புதன், ஏப்ரல் 21, 2010

அச்சகத்தெரு

"ஏலே நம்மூரு கோயில் திருவிழாவுக்கு அய்யா வந்திருக்காங்களே... எப்படியும் வேலைக்கு ஆள் எடுப்பாவடே... நாமளும் போய்ச் சேரலாம்?''

"சரிடே... அய்யாக்கிட்ட வேலை கேக்குறதுக்கு முன்னாடி அய்யாவோட எடுப்பு ஒருத்தர் இருப்பாருடே... அந்த அண்ணாச்சியக் கவனிச்சா நமக்கு சிபாரிசு பண்ணுவாருலே''

"எடுப்புக்கு எவ்வளவுடே கொடுக்கணும்"
"ஒருமாசச் சம்பளத்தைக் கொடுக்கணும்டே. முழுச்சம்பளத்தையும் கொடுக்காட்டியும் பரவாயில்லை. இரண்டு தவணை கேட்டு அந்த அண்ணாச்சி பெரிய மனசு பண்ணி சேத்து வுட்ருவாருலே"

"டேய் மக்கா! என்னலா இம்பூட்டு கூட்டமா இருக்கு... நாமத்தான் சீக்கிரம் வர்றோம்னு நெனைச்சா அதுக்கு முன்னாடியே இவ்ளோ பேரு நிக்கிறாங்களடே?"

"எவ்ளோ பெரு நின்னாலும் நமக்கு வேலை கிடைச்சிரும்ல. எடுப்புக்கிட்ட அட்வான்ஸா பணத்தைக் கொடுத்தாச்சுல..."

"வேற எதுவும் எடுப்பு சொன்னாரேடே?"

"ஆமாம்ல... அய்யாவப் பார்த்ததும் டக்குன்னு கால்ல வுழுந்துரணுமாம். அய்யா நீங்க தான் எங்களுக்கு எல்லாம்னு டயலாக்குலாம் பேசணுமாம். அவரு எழுந்திரிப்பான்னு சொன்னாக்கூட கால விடக்கூடாதாம். அப்ப எடுப்பு பக்கத்துல இருந்துட்டு, அய்யா இது நம்ம பயலுவ தான்னு மண்டைய சொறிவாராம். அப்பத்தான் அய்யா நம்ம கையில இருக்கிற பயடோட்டாவை வாங்கிப் பார்த்துட்டு வேலையில சேர்த்துக்கலாம்னு எழுதி கையெழுத்துப் போடுவாராம். அப்ப எழுந்திருச்சு அய்யாவுக்கு நன்றி சொல்லிட்டு திரும்பவும் காலைத் தொட்டுக் கும்பிட்டுட்டு கையக் கட்டிட்டே வெளியே போயிரணுமாம்."

"அவர் காலுல விழுந்தாத்தான் வேலைக் கிடைக்கும்னு சொல்லு... அப்படி ஒரு வேலைத் தேவையாடே...?"

" 'அங்காடித் தெரு'வுல மட்டும் வேலைக்கு சேக்குறதுக்கு என்னெல்லாம் செய்றாங்க. ஒரு துணிக்கடையில வேலைக்கு சேர்றவங்களுக்கே இந்த மாதிரில்லாம்னா... நாம தமிழகத்தின் நம்பர் ஒன் நாளிதழ்ல வேலைக்கு சேரணும்னா இதையெல்லாம் செஞ்சாத்தாணே முடியும்"

1 கருத்து:

SAMUTHRA சொன்னது…

//நாம தமிழகத்தின் நம்பர் ஒன் நாளிதழ்ல வேலைக்கு சேரணும்னா இதையெல்லாம் செஞ்சாத்தாணே முடியும்" //

எந்த நாளிதழ சொல்றீங்க செய்யது முகமது ஆசத் சார்?