ஏல... அந்த எதிர்வீட்டுப் பபயலும் உன்னமாதிரிதானல்ல... ஊங்கூட ஒண்ணாத்தானே படிக்கிறான். ஒங்க ரெண்டுபேருக்கும் வாத்தியாரு ஒண்ணுபோலத்தான சொல்லிக் கொடுக்காரு! அப்புறம் ஏண்டா மார்க் உனக்கு குறைஞ்சிருக்கு. அந்தப் பயலப் பாருல... நல்ல மார்க் எடுத்திருக்கான். பரிசெல்லாம் கொடுக்கிறாங்க. எனக்கு அதைப் பார்க்கும்போது உன்னை நெனைச்சி வயிறெரியுது. அவன் மாதிரி நீயும் மார்க் வாங்குனா உனக்கும் பரிசு தருவாங்கல்லா... நானும் பெருமையா எம்புள்ளை பரிசு வாங்கியிருக்கான்னு சந்தோஷப் படுவம்ல... அவன் மூத்திரத்தைக் குடிச்சாக்கூட உனக்கு எல்லாம் புத்தி வராதுல... எப்படியும் உருப்படாமப் போ...
அப்பா வழக்கம்போல் சூடான அர்ச்சனைகளை வழங்கிவிட்டு விசுக்குன்னு வீட்டிலிருந்து வெளியேறி ரோட்டுக்குப் போனார்.
ஆமா இது எப்பவும் நடக்குறதுதான... என்னமோ இவுக மட்டும் பெரிய ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டரு வேலை பார்க்குறாங்க, படிக்கிற காலத்துல என்னமோ ஸ்கூல் பர்ஸ்ட் மாதிரி பேசுறாங்க... உங்கப் புள்ளைத்தான உங்கள மாதிரி தானே நான் வருவேன். உங்க அளவுக்கு பெயிலாகி பள்ளிக்கூடத்துக்கு மூட்டை கட்டாம எண்பது சதவீத மார்க் வாங்கிட்டுத்தானே வர்றேன். அடுத்த பயக்கூட கம்பேர் பண்ணி என்னத் திட்டாட்டா உங்களுக்கு தூக்கமே வராது... மனசுக்குள்ளே அப்பாவோடு சண்டையிட்டபடியே வெளித்திண்னணக்குப் படிக்கப் போனேன் எதிர்வீட்டிலிருந்து வரும் லைட் வெளிச்சத்தில்!
1 கருத்து:
netthi adi machi.intha appanungale ippadithaan.
---nontha ullam
கருத்துரையிடுக