புதன், செப்டம்பர் 10, 2008

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே

அந்த ஊரின் பரபரப்பான சந்தை அது। அந்தச் சாலையில் செல்வோர்கள் கண்டிப்பாக இந்த இருவரின் கண்களில் இருந்தும் தப்பிக்க முடியாது। ஆம் அவர்கள் அங்குதான் யாசகம் கேட்கும் தங்களின் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்கள்।
அரசியலைப் போல, இந்தத் தொழிலுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை। எந்த விதத்திலாவதுமக்களை ஏமாற்றத் தெரிந்திருந்தால் போதும்।
ஆனாலும் அவர்களிலிருந்து மாறுபட்டவர்கள் இந்த இருயாசகர்களும்। தங்களது உடல் குறைபாடுகளால் அவர்கள் இந்தத் தொழில் செய்து வருகிறார்கள்।
ஆண்டவன் மட்டும் நம்மள நல்லவிதமாக படைத்திருந்தான் என்றால், இது போன்ற யாசகர்களுக்கு நாம் நிறைய செய்வோம் என்பார்கள், எப்போதென்றால் தங்களுக்கு யாராவது யாசகம் தராமல் சென்றால்।
ஆனால் ஆண்டவன் இருக்கத்தானே செய்கிறான்। ஒருநாள் அந்த ஆண்டவன் இவர்கள் முன் வந்தார்। அவரிடமும் யாசகம் கேட்டார்கள்। ஆளுக்கு மூன்று முட்டைகளைக் கொடுத்தார்।
தாங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை நினைத்தபடி இந்த முட்டையை உடைத்தால் அவை கிடைக்கும்।
சொல்லிவிட்டு மறைந்ததால், அவர் கண்டிப்பாய் கடவுள்தான் என்று நம்பினார்கள்। அன்றைய தொழில் முடியும் நேரம் வந்தது।
இந்த முட்டைகளை மறுநாள் உடைப்போம்। அதுவரை யோசிப்போம் என்று கூறிக் கொண்டவர்களாக இருவரும் தங்கள் பகுதிக்கு தனித்தனியே சென்றுவிட்டனர்।
முதலாமவன் சென்ற பாதையில் கண்பார்வையற்ற ஒரு பெண் பூ கட்டி விற்பனை செய்து கொண்டிருந்தாள்। இது அவனைப் பாதித்தது। அவளிடம் சென்று விசாரித்தான்। பார்வையற்ற நீ, ஏன் உழைத்து உண்கிறாய்। யாசகத் தொழிலில் ஈடுபடலாமே என்றான்। என் உழைப்பில் கிடைக்கும் சிறுவருவாயில் எனக்கு பூரண மனநிம்மதி கிடைக்கிறது। அடுத்தவரிடம் யாசகம் பெறுவது என்பது எனது மனசாட்சிக்கு ஒப்பானது அல்ல என்றாள்। அந்தப் பெண்ணின் பேச்சு அவனுக்குள் ஒரு மனமாற்றத்தை ஏறுபடுத்த, உடனே ஒரு முட்டையை எடுத்து , அந்தப் பெண்ணுக்கு கண்பார்வை கிடைக்க வேண்டும்। தானும் நலம்பெற வேண்டும் என்று கூறி உடைத்தான்।
அவ்வாறே நடந்தது। அந்தப் பெண் நன்றிக்கடனாக, அவனையே திருமணம் செய்ய சம்மதித்தாள்। பின்னர் மற்ற இரு முட்டைகளையும், வசதி வாய்ப்பு கோரியும், ஆரோக்கியமான, நிம்மதியான வாழ்க்கை வேண்டியும் உடைக்க அவன் மிகப்பெரும் தனவந்தனான்।
புதுவாழ்வு கிடைத்த மகிழ்வில் தன் பழைய இடத்துக்கு செல்லவில்லை। அதிர்ஷ்டத்தால் கிடைத்த செல்வத்தை பலமடங்கு பெருக்கினான்।
சில ஆண்டுகள் கழித்து, பழைய சந்தைப் பாதைக்கு சென்றான்। அங்கு மற்ற யாசகன் அமர்ந்து யாசகத் தொழில் செய்து கொண்டிருந்தான்।
தனவந்தனை அடையாளம் தெரிந்து கொண்ட யாசகனிடம், முதலாமவன் முட்டை கிடைத்தும் ஏன் இப்படியே இருக்கிறாய் என்று கேட்க, அவன் தன் குமுறலை சொல்லத் தொடங்கினான்।
உன்னிடம் சொல்லிவிட்டு, நான் என்வழியே சென்று கொண்டிருந்தேன்। அப்போது அங்கு ஒரு விலைமாது நின்று கொண்டிருந்தாள்। அவளை நெருங்கினேன்। அன்றைய தொழிலில் சம்பாதித்ததை அவளிடம் கொடுத்து என் இச்சையை தீர்த்துக் கொண்டேன்। பெண் சுகத்தில் திளைத்த நான், என்னிடம் முட்டை இருக்கும் கதையை சொல்ல, அவள் நைசாக என்னிடமிருந்த முட்டையை எடுத்து கொண்டு ஓடிவிட்டாள்।
அதிர்ஷ்டம் கையில் கிடைத்தும் அதை அடைய முடியாத பாவியாகி விட்டேன்। என்று அழுதான்।
முதலாமவன் , அவனது செலவுக்கு பணம் கொடுத்து விட்டு தன்வழி நடந்தான்।
நீதி: ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே

கருத்துகள் இல்லை: