இந்தக் கூத்தும் இங்கதான் நடக்குது
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்ஷன்।( ஆண்கள் தங்கும் விடுதி) இரவு பனிரெண்டரை மணி। திபுதிபுவென திரண்டு வந்தார்கள் போலீஸார்।
நாங்கள் மேன்ஷனை சோதனையிட வேண்டும்.....
வழக்கம் போல சுதந்திரதின நாளையொட்டி, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பஸ்நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள் போன்ற பகுதிகளில் போலீஸாரின் பலத்த சோதனை। முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு.
நள்ளிரவு வாகன சோதனைகள் என்று சர்வ ஜாக்கிரதையாக போலீஸார்....
சமீப நாட்களாக பயங்கரவாதிகள் என்று முத்திரையுடன் சிலரையூம் போலீஸார் பிடித்தும், சிலரை தேடுவதாகச் சொல்லிவருவதும் இந்த அதீத எச்சரிக்கை உணர்வினால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்।.....
மேன்ஷனில் புகுந்த போலீஸாருடன் ஒரு பெண் காவல் அதிகாரியும் உண்டு। விடுதி காவலாளியின் சிபாரிசின் பேரில்???? மூன்று அறைகளை மட்டுமே சோதனை மேற்கொண்டுள்ளனர்।
தீவிர சோதனையில் பெண் அதிகாரியின் கையில் ஒரு புத்தகம் கிடைத்தது। அவ்வளவு தான் அந்த புத்தகத்துக்கு சொந்தக்காரரான ஒரு இளைஞரை காவலர்கள் அழைத்து சென்றனர்।
அந்தப் புத்தகம் எந்த இயக்கத்தைச் சேர்ந்தது? அதில் எப்படிப்பட்ட தகவல்
இருந்தது? அதில் தமிழகத்தை உலுக்கும் திட்டம் எதுவும் குறிக்கப்பட்டிருந்ததா என்றால்.........
அது ஒரு ஆபாச புத்தகம்। இந்தப் புத்தகத்தை அந்த இளைஞர் வைத்திருந்தார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்। பெரிய பெரிய பதிப்பகங்களே, டாக்டர்களின் பெயர்களில் கேள்வி பதில் என்ற பெயரில் இதுபோன்ற புத்தகத்தை விற்பனைசெய்து வருகிறது என்பது தெரியாததல்ல.
மறுநாள் மற்ற அறை நண்பர்களின் முயற்சியால் அவர் வெளியே கொண்டு வரப்பட்டார்।
இங்கு தான் ஒரு கேள்வி।
ஆபாச புத்தகத்தை அந்த இளைஞர் வைத்திருந்தது குற்றம் என்றால், அது போன்ற புத்தகத்தை விற்பனை செய்பவர்களையும், அச்சடித்து வினியோகிப்பவர்களையும் ஏன் இவர்கள் கைது செய்யவில்லை।
பர்மா பஜாரில் இன்றும் விற்கப்பட்டு வரும் ஆபாச பட சி।டி।க்களை பறிமுதல் செய்து, விற்பவர், அதை தயாரித்தவர் என எந்த நெட்வொர்க்காவது கைது செய்யப்பட்டுள்ளதா?
இதை விட முக்கியம் இன்று நடன நிகழ்ச்சிகள் என்ற பெயரிலும், தொடர்கள் என்ற பெயரிலும் டி।வி।க்களில் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகளில் துளியளவு கூட ஆபாசம் இல்லை என்று எந்த தயாரிப்பாளர்களாவது சொல்லியிருக்கிறார்களா? அல்லது ஆபாசத்தை பரப்புகிறார்கள் என்று இதுபோன்ற கைது நடவடிக்கை இவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளதா?
தனி மனிதனின் ஆபாச செயல்களை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க முனைவோர்கள், சமுதாயத்தில் ஆபாச செயல்களை எந்த வழியாகச் செயல்படுத்தினாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 கருத்துகள்:
சரியான கேள்வி ஆசாத்.. என்னை கேட்டால் இது தனி மனித உரிமை மீறல் என்றே சொல்லலாம்
ஐயா.. இப்பல்லாம் போலிசு வயர்,பேட்டரியுடன் தான் அலயுராங்களாம். ஜாக்கிரத, அவங்க நினைச்சா யாரையும் தீவிரவாதியா மீடியாவுல காட்ட முடியுங்கோவ்....
yov, jakkirathai, pichupuduven
கருத்துரையிடுக