என்னை
நான்
சுவாசிக்கையில்
எனக்குள்
வசித்தவள்,
பெயர்ந்ததேன்
உன்னை
யாசிக்கையில்!
வசிப்பிடம்
மட்டுமே
நான்!
வாழ்விடம்
அவன்!
புரிந்தது உன்
புதுத்துவம்!
ஏமாளி நான்
என் எண்ணம்!
இல்லை...
காலத்தின்
பதில்!
அவன்
ஏமாற்றியதில்
பரத்தையாய் நீ!
கேள்விப்பட்டேன்...
தேடமுயலவில்லை!
உன் வசிப்பிடம்
காலியாய்
என்னுள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக