இந்த நிகழ்வில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே! உண்மையைத் தவிர வேறு வழியில்லை.
--------------
அம்மா நான் கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்.
எந்த கோயிலுக்கடி?
நம்ம மேடவாக்கம் மதுரை வீரன் சாமி கோயிலுக்குத்தான்!
அய்யோ வேனாண்டி! இப்பத்தான் அந்த சாமியாரு மூணாவதா ஒரு டாக்டரை கட்டிக்கிட்டு அங்க இங்கன்னு ஒரே பிரச்சினையாச்சு. இப்போது ஒரு வழியா அந்த டாக்டரு பொம்பள அவரை விட்டுட்டு போயிடுச்சு. அந்த ஆளையும் போலீஸ்ல புடிச்சுட்டு போயிட்டாங்க!
அம்மா நல்ல வேளை நீ சொன்ன. இல்லாட்டி நானும் போயி நாலாவதா போயிருக்க வேண்டியிருக்கும்.
(அட லூசு மகளே, ஏற்கனவே நான் ஏமாந்ததை எப்படிடி சொல்றது உங்கிட்ட.)
___________
யக்கா, இன்னனக்கு எங்கூட்டுக்கு அந்த சடாமுடி சாமியாரினி வர்றாங்கக்கா. வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போங்க.
எந்த சாமியாரினிடி!
அதாங்க அந்த மல்லிகா சாமியாரினி.
அட இவளே! சும்மா மல்லிகான்னு சொல்லாதடி, சயனைடு மல்லிகான்னு சொல்லு. இனத்துக்காகப் போராடி சாவுற புலிகளுக்கு அப்புறமா, பெண் இனத்தை சாகடிக்கிறதுக்காக அதிகமா சயனைடு யூஸ் பண்ணுனது இந்த மல்லிகா தாண்டி!
யக்கா என்னமோ சொல்லி பயங்காட்டுறீயேக்கா!
அட இவளே, அந்த பொம்பளையை பார்க்க கோயிலுக்கு போனவங்களுக்கு பிரசாதம் தர்றேன்னு சொல்லி சயனைடு கொடுத்து கொன்னுருக்காடீ. ஆறு, ஏழு பேரை சயனைடு கொடுத்தே காலி பண்ணிட்டு கம்பி நீட்டியிருக்கா. இப்ப கம்பி எண்ணிக்கிட்டிருக்கா. தெரியும்லா?
அப்படியாக்கா. நல்ல வேளை என்னைய காப்பாத்திப்புட்டீங்க.( அட இவளே சயனைடு மேட்டரை முன்னாடியே சொன்னாக்க எங்க மாமியாருக்கு எப்பவோ பிரசாதம் ரெடி பண்ணியிருப்பேனே!)
_____________
போலி சாமியார்களையும், சாமியாரிணிகளையும் நம்பி மோசம் போகும் நம்மவர்கள் இருக்கும் போது.... என்னத்த சொல்ல, இப்படி உண்மையக் கூட ஜோக்காக போடுறதுக்கு என்னமாதிரி ஆசாமி வந்துருவான்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக