திங்கள், அக்டோபர் 01, 2007

பந்த் - தி.மு.க., அ.தி.மு.க. வெற்றி, மக்கள்?

சேது சமுத்திரத் திட்டத்துக்காக ராமர் பாலத்தை உடைக்கக் கூடாது என்று மதச்சாயம் பூசிய அரசியல் கட்சிகளும், அதற்கு ஒத்தூதும் கட்சிகளும் காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றன. இதையும் தாண்டி சாது வேஷத்தில் திரியும் சில கபடதாரிகள் தலையைக் கொய்வோம் என்று கர்ச்சிக்கவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசோ வாயை மூடிக் கொண்டு மவுனம் காக்கின்றது. ஆனாலும் தமிழக மக்களின் வளத்தை கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியேத் தீருவது என்னும் திடத்தில் தமிழகத்தை ஆளும் கூட்டணிக் கட்சிகள் பந்த் நடத்த தீர்மானித்து அறிவிப்பும் வெளியிட்டது.

எதிர்க்கட்சிகளின் தடையை சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த போதிலும், டெல்லி உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு பந்த்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அவ்வளவுதான் அ.தி.மு.க., 'தனது வழக்கின் காரணமாக பந்த்துக்கு தடை விதித்தது டெல்லி" என்று உரககக் கூவிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் அசராத தமிழ்க ஆளும் கூட்டணிக்கட்சி அதிரடியாக உண்ணாவிரத அறிவிப்பை வெளியிட்டதோடு இன்று அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

அரசு பஸ்கள் இன்று சென்னை உள்பட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலும் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள் மட்டும் அதுவும் அ.தி.மு.க. அனுதாபிகளின் பேருந்து மட்டும் சும்மா ஓடிக்கொண்டிருக்கிறது.

பந்த்துக்கு தடை வாங்கியதன் மூலம் அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றுவிட்டது, உண்ணாவிரதம் அறிவித்தும் பந்த்தைப் போன்ற சூழலை தமிகத்தில் நிலைநாட்டியதன் மூலம் தி.மு.க. கூட்டணியும் வெற்றி பெற்றுவிட்டது.

ஆனால் பந்த் இல்லை என்று பள்ளி கல்லூரிக்கு புறப்பட்டவர்களும், வேலைக்குசென்றவர்களும் பேருந்துகள் இயங்காத காரணத்தால்போங்கடா நீங்களும், உங்க அரசியலும் என்று வசைமாறிப் பொழிந்தபடி வீட்டுக்கு திரும்பிவந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: