வியாழன், அக்டோபர் 25, 2007

தொடரும் வன்புணர்வுகள். விழிப்பது எப்போது?

சமீப நாட்களாக தமிழகத்தில் வன்புணர்வு நிகழ்வுகள் அதிகரித்து உள்ளது. அதுவும் 10 வயது சிறுமியை 14 வயது சிறுவன் வன்புணர்ந்தது, 13 வயது மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை 65 வயது முதியவர் வன்புணர்ந்தது, 12 வயது சிறுவனுடன் 35 வயது பெண்மணி உறவாடியது, 24 வயது மகனின் நண்பனுடன் உல்லாசமாக இருந்த 45 வயது பெண் என்றெல்லாம்... நாகரிகமாகி வரும் பட்டிணங்களில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் ஒருகாலத்தில் நிகழ்ந்தது. ஆனால் இன்று குக்கிராமங்களிலுக் இந்த அசிங்கங்கள் அரங்கேறச் செய்கிறது.

இந்த நிலைக்கெல்லாம் காரணம்... கூடா ஒழுக்கமும், கற்பு மறைத்தலும், பேராண்மை மறத்தலும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டி மனக்குதிரையின் கடிவாளம் தன்னை அடக்கத் தெரியா மானிடரும், கண்ணுக்குள் புகுந்து மனதை மாற்றும் தொலைக்காட்சி தொடர்களே முக்கியப் பங்கு வகிக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நம்பி ஊரிலிருக்கும் ஒரு சில தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் கூட்டம் கூடும். ஆனால் இன்று நிலைமை வேறு.
வீட்டுக்கு வீடு கலர் டிவிப் பெட்டியே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பஞ்சபூதங்களுக்கு அடுத்து கேபிள் கனெக் ஷன்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
காலை10 மணிக்கெல்லாம் தொடங்கும் இந்த மெகா தொடர்கள் நம் மனங்களில் மெகா நிகழ்வுகளை நிகழ்த்தி விடுகிறது.
குடும்ப செண்டிமெண்ட் என்ற பெயரில் இரண்டு பொண்டாட்டி, கணவன் குடிகாரன், கணவன் கொலைக்கு பழிவாங்கும் மனைவி, தாய்க்கு உதவும் மகள், பணத்தைக் காட்டி பெண்களை வளைக்கும் வில்லன், பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன்னை இழக்கும் பெண், குறைந்தது 4 பெண்குழந்தைகள், வளர்ந்தபின் ஒருவருக்கொருவர் தினந்தோறும் சவால், சின்ன வயசில் அம்மா சோரம் போய் பிறந்த மகள் பெரியவளானதும் கேள்வி கேட்பாள், ................. இப்படித் தொடர்கிறது இந்த தொடர்கதைகள்.
மனசு ரிலாக்ஸாக இந்தத் தொடர்களை பார்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள் மனதுக்குள் பாக்ஸ்பாக்ஸாக சமுதாயக் குற்றங்களை கொலுவேற்றி விடுகிறார்கள்.
விளைவு மேற்கூரிய வன்புணர்வு நிகழ்வுகளுக்கு சத்தமில்லாமல் அடித்தளமிடப்பட்டு விடுகிறது.

தொடக்கக் காலங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறையில் வீட்டில் பெரியவர்கள் இருந்து சிறியவர்களுக்கு வாழ்க்கையை வழிகாட்டி வந்தனர்.
ஆனால் என்று தனிக்குடித்தனம், ஆண் பெண் சம்பாதிக்கிறோம் அதனால் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப்போகிறோம் என்று கிளம்பினார்களோ அன்றே பிடித்துவிட்டது இந்தப் பின்னடைவு.
இதை அகற்ற என்ன செய்யப்போகிறோம்.
தீர்வு நாளைப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை: