சனி, செப்டம்பர் 29, 2007

'நான் பேசுகிறேன்'!

உடன் பிறப்பவன்
'நான்'-
கண்டு கொள்வதில்லை நீ!

கை வீசி, கால் அசைத்தும்
'என்' தடம்
தெரிவதில்லை!

வாழ்க்கைப் பயணத்தில்
பல மைல்கல் -
அப்போதும் உடன் 'நான்'

கானல் நீர்,
அடி வானம்
'என்' மீதான உன் உருவகம்

வாலிபம் களைந்ததால்
வாட்டம் -
'நான்' இளமையாய்!

தேடுகிறாய் 'முடிவை'
கண்ணாமூச்சி
காட்டுகிறேன்!

கானல் நீர், அடிவானம்
சத்தியம்
அழுது புலம்புகிறாய்!

'நான்'
அரவணைக்கிறேன்.

கருத்துகள் இல்லை: