உடன் பிறப்பவன்
'நான்'-
கண்டு கொள்வதில்லை நீ!
கை வீசி, கால் அசைத்தும்
'என்' தடம்
தெரிவதில்லை!
வாழ்க்கைப் பயணத்தில்
பல மைல்கல் -
அப்போதும் உடன் 'நான்'
கானல் நீர்,
அடி வானம்
'என்' மீதான உன் உருவகம்
வாலிபம் களைந்ததால்
வாட்டம் -
'நான்' இளமையாய்!
தேடுகிறாய் 'முடிவை'
கண்ணாமூச்சி
காட்டுகிறேன்!
கானல் நீர், அடிவானம்
சத்தியம்
அழுது புலம்புகிறாய்!
'நான்'
அரவணைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக