சனி, அக்டோபர் 06, 2007

இவர்களுக்கு ஆதரவு யார்?

பிறந்தாலும் அரசியல்வாதி வீட்டு நாயாகப் பிறக்க வேண்டும். கிராமத்து சொலவடைக்கு அர்த்தம் இல்லாமல் இல்லை.
இன்றைய செய்தித்தாளில் ஒரு பிட் செய்தி. நடிகர் அர்ஜுன் வீட்டு வேலைக்காரர் மரம் ஏறும் போது விஷவண்டு கொட்டியதால் மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் அதேவேளையில் செய்தியின் காரணமாக அந்த வேலைக்காரர் குடும்பத்துக்கு அர்ஜுன் ஏதாவது நஷ்ட ஈடு கொடுத்தால் சந்தோஷம்.
ஆனால் இன்று எத்தனை வேலைக்காரர்களின் மரணம் வெளியே தெரியாமல் நடந்து வருகிறது, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மறைக்கப்பட்டு வருகிறது.
ஒரு கட்டிடத் தொழிலாளியாக இருந்தாலோ, சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தாலோ அவர்கள் தங்களுக்கென சங்கங்கள் அமைத்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர்.
ஆனால் வீட்டுப் பணியாளர்களுக்கான சங்கங்கள் என்பது இதுவரை இல்லை என்றே தெரிகிறது.( ஒருவேளை இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.)
தனது வருமானநிலை தெரிந்து தன்னால் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்கிற போதுதான் வீட்டுப் பணியாளர்களை நியமித்துக் கொள்கிறார்கள்.
எனவே, இவர்களிடம் வீட்டுப்பணியாளர்கள் தங்களின் வேலை அளவுக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகளைக் கேட்டுப் பெறமுடியும்.
இவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டால் அரசிடமிருந்து தங்களுக்கான நலவாரியங்களையும் அமைத்து கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை: