உரிமையாச் சொல்லிக் கூப்பிட
ஊறவுன்னு யாருமில்லை
அம்மா, அப்பான்னு
உதடை நனைக்கும்
வார்த்தைக்கும் வழியில்லை
ஆனாலும் என்னைக்
கூப்பிடுறாக எல்லோரும்
அனாதையின்னு!
அனாதைன்னா
கடவுளோட
பிள்ளையாமே...
அப்படியா!
அம்மா அப்பா
அங்கிருக்கு
அக்கா தங்கச்சி
இங்கிருக்கு
அண்ணன் தம்பி
எங்கும் இருக்கு
உறவுக எல்லாம்
உயிரோடவே இருக்கு
ஆனாலும்
நானும் அனாதையாம்...
ஏன்னா நான்
அரவாணியாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக