புதன், மே 26, 2010


சாத்தான்குளத்தில் உலக வெப்ப மயமாதல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணத்தை அணிதா ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம் வட்டார மனித நேய பெருமன்றம் மற்றும் மக்கள் நல அமைப்பு சார்பில் உலக வெப்ப மயமாதல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணம் சாத்தான்குளத்தில் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு மனித நேய பெரு மன்ற தலைவர் பங்குதந்தை பர்ணபாஸ் தலைமை வகித்தார். செட்கோ இயக்குனர் ஜார்ஜ், வீட்ஸ் இயக்குநர் சார்லஸ், குளோப் இந்தியா இயக்குநர் ரெக்ஸ் சந்தனரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் கணபதி வரவேற்றார்.
டாடா ஸ்டீல் மேலாளர் ராஜாமணி, இந்தியன் காஸ் நிறுவன மேலாளர் மோகன், தொழிலதிபர் ஜெயக்குமார், யூனியன் கவுன்சிலர் மீனா, இந்திய புவிக்காந்த வட்டார மைய இயக்குநர் குருபரன், பங்குதந்தை எட்வர்ட உள்ளிட்ட பலர் பேசினர்.
அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணத்தை தொடங்கி வைத்தார். சைக்கிள் பிரசாரம் சாத்தான்குளத்திலிருந்து இட்டமொழி, கோட்டை கருங்குளம் வழியாக வள்ளியூர் சென்றது. புதுக்குளம் கல்லூரி முதல்வர் வேணுகோபால், வக்கீல் இளங்கோ, காசியானந்தன், யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய திமுக அவைத்தலைவர் சத்தியராஜன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செல்லச்சாமி, நகர அபிவிருத்தி சங்கத்தலைவர் செந்தில்ஆறுமுகம், பாவேந்தர் கலை இலக்கிய பேரவை செயலாளர் ஜோசப் மெஸ்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மன்ற செயலாளர் மகாபால்துரை நன்றி கூறினார்.
சைக்கிள் விழிப்புணர்வு பேரணிக்கு உதவிய நல் நெஞ்சங்களுக்கு எனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: