திங்கள், ஜனவரி 25, 2010

பாலாவுக்கு வாழ்த்து!



நான் கடவுள் படத்தின் இயக்குனர் பாலாவுக்கு தேசிய விருது! பாலா அடைந்த சந்தோஷத்தை விட எனக்கு கூடுதலாகவே இருந்தது.
நந்தா படம் பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளால், அந்த பாலா என்கிற இயக்குனர் அடுத்தடுத்து எடுக்கும் படங்களை எப்படியும் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தேன்.
ரௌத்ரம் பழகிய நாயகன் தாய்ப் பாசத்துக்காக ஏங்குவதும், இறுதியில் தாயின் கைகளால் தரப்படும் சாத்தத்தில் விஷம் கலந்திருப்பதை அறிந்தும், விரும்பி வாங்கி ஜனனம் தந்த தாயிடமே மரணத்தையும் வாங்குவது என்ற முடிவில் தன்முத்திரையை பதிய வைத்தார்.
சேது படம் அவரது இரண்டாவது இமாலய வெற்றி! படத்தின் முடிவில் கதைமாந்தனின் சித்தம் சரியாகிவிட்டதா? இல்லையா என்று நமது சிந்தைக்கு மட்டுமல்ல ஆறாம் அறிவர்களின் மனதையும் தட்டி எழுப்பியிருந்தார்.
பிதாமகன் - தன் நண்பனுக்காக விளிம்பு நிலை மனிதன் எடுக்கும் அவதாரம்.
நான் கடவுள் - வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்...
வாழ விடாதவர்களுக்கு நான் தரம் மரணம் தண்டனை...
கருத்தை மனதில் பதிய வைப்பதற்காக தேர்ந்தெடுத்த களம், கதாபாத்திரத்தின் தன்மை, காட்சியமைப்பு, முடிவு என்பவற்றுக்குள் இன்னொரு உலகம் என்று தமிழ் சினிமா உலகம் நுழையவே முயற்சிக்காத பயணத்துக்குள் புகுந்து எல்லையை கண்ட படம்.
பாலாவுக்கு விருது எனக்கு, உனக்கு ஒவ்வொரு தமிழனுக்கும், உண்மை சினிமா ரசிகனுக்கும் கிடைத்த விருது.
இன்னும் கலைப்பயணம் தொடரட்டும்.

கருத்துகள் இல்லை: