


மகிந்த ராஜபக்சே இலங்கையின் அதிபர் பதவியை மீண்டும் பெற்றிருக்கிறார்.
இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி பதிவான வாக்குகள் 1,04,95,451. செல்லுபடியான வாக்குகள் 10,393,613. மகிந்த ராஜபக்சே 60,15,934(57.88%)வாக்குகள் பெற்றிருக்கிறார். பிரதான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சரத் பொன்சேகா 41,73,185 (40.15%) வாக்குகள் பெற்றிருக்கிறார். தமிழர்களுக்காக குரல் எழுப்பிக்(?) கொண்டிருந்த சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகள் 9,662 (0,09%).
தமிழர் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள், வாக்காளர் அடையாள அட்டை தரப்படாமை, வாக்குச் சாவடி செல்வதற்கான போக்குவரத்துகள் நிறுத்தம், தமிழர்களின் குறைந்த சதவீதத்தினாலான வாக்களிப்பு வீதம் ஆகியவை தனது தோல்விக்கான காரணங்களாக சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். மேலும் ராஜபக்சே அரசின் அச்சுறுத்தல் செயல்பாடுகளும் தன் தோல்விக்கு காரணம் என்று கூறியிருப்பதோடு தாம் இந்த தேர்தல் முடிவினை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பேட்டியினூடே தெரிவித்திருக்கிறார்.
மகிந்த ராஜபக்சே தனது வெற்றியைத் தொடர்ந்து கொடுத்த பேட்டியில் இந்த அரசு எல்லாருக்குமான அரசு (தமிழர்களைத் தவிர்த்து...?). நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரையும் சமத்துவத்தோடுதான் பார்க்கிறது. சிறுபான்மையினர் என்ற பேதமில்லை என்று கூறியிருக்கிறார்.
எல்லாம் பேச்சோடு சரி... தனது சிங்கள பேரினத்துக்காக தமிழர்களின் பெரும்பகுதியை காவு வாங்கிவிட்டு, எஞ்சியோரையும் வதைமுகாம்களில் அடக்கி ஒடுக்கிவிட்டவர்தான் இந்த மகிந்த. பதவி, அதிகார வெறியினை தனது குடும்பத்தின் கையில் வைத்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் கூட்டுழைப்புடன் ஒரு இன அழிப்பினைச் செய்து அதில் ஏறக்குறைய 90 சதவீதம் பேரை அழித்து விட்டார்கள். இருக்கும் 10 சதவீதம் பேர்களுக்கும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை நசுக்கி வைத்திருப்பதால் அது கேள்விக்குரியான வாழ்வுதான்.அதுமட்டுமல்ல டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகிய 'பச்சை' தமிழர்கள், இருக்கும் தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்யப் பயன்படுத்தப்படுவார்கள்.
தனது பழைய அதிபர் பதவியின் குறையாக உள்ள ஒன்றரை ஆண்டுகாலம், புதிய பதவியின் சுமார் ஆறு ஆண்டுகாலம் என மொத்தமாக ஒரு ஏழரை ஆண்டுகாலத்தை குத்தகை எடுத்திருக்கிறது இந்த ஏழரை பக்சே...
இனி அதன் நடிவடிக்கைகள் இதுவாகத்தான் இருக்கும்...
தனக்கான வெற்றிக்கு பெருவாரியான வாக்குகளை அளித்த சிங்களர்களை வாழ்விக்கவே இந்த ஏழரை விரும்பும். தமிழர்கள் பகுதிகளை இல்லாமல் போகச் செய்து தந்து பௌத்தப் பேரினவாதத்தை அமர்த்தும்.
முக்கியமாக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பார்முலாவில் சிறுபான்மை இஸ்லாமியர்களுடன் வைத்திருந்த கூட்டணி முடிவு பெறும். ஏற்கனவே ஒரு இனத்தை அழித்த மமதையில் இதோ இந்த இனத்தையும் அழித்துவிட்டால் இலங்கை என்பது சிங்களர் தீவு என்றே நிலைத்து விடும்.
இலங்கை அரசின் வருவாய்க்கான கேந்திரங்களாக இருக்கும் இஸ்லாமிய தொழில் அதிபர்களையும், வெளிநாடுகளில் வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்களையும் உள்நாட்டில் பெருந்தனக்காரர்களாக இருப்பவர்களையும் இனி வெள்ளைவேன் சம்பவங்கள் மூலமாகக் கடத்தி தங்கள் கைக்குள் கொண்டு வர சிங்களர்கள் முயற்சிப்பார்கள்.
ஆட்சி அதிகாரம் சிங்களமயமாக்கப்படும். எப்படி நேபாளம் இந்து நாடு என்று தனித்துவம் பெற்றிருக்கிறதோ அதே போல் இலங்கை என்பது மருவி சிங்களத் தேசம் என்று மாறும்.
பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் சிங்களனாகவே இருக்கும்....
இந்த நிலையை வரவிடுவதுவும், வராமல் இருக்கச் செய்வதும் இருக்கும் சிறுபான்மை இஸ்லாமியர்களின் கைகளில்தான் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக