வியாழன், அக்டோபர் 30, 2008

ஹாய் பேச்சிலர்ஸ்!

இந்த வாழ்க்கையிலேயே மிகவும் கஷ்டமான விஷயம் என்னன்னா, சமையல் பாத்திரங்களை கழுவி வைப்பதும், துணிகளை துவைப்பதும் தான்.

ரெண்டு பேச்சுலர்களின் இந்த சோக வார்த்தை என் செவிகளில் விழ என் கேட்பு திறனை இன்னும் கொஞ்சம் கூர்மைப்படுத்தினேன்.

என்னடா மச்சான் பண்றது, வேலைக்குன்னு சென்னைக்கு வந்தாலும் சாப்பாடு தாண்டா கஷ்டமா இருக்குது. அஞ்சு வருஷமா ஹோட்டல் சாப்பாட்டுலேயே தாண்டா வாழ்க்கை ஓடிட்டு இருக்குது. ஏதாவது விஷேசம்னு வந்து ஊருபக்கம் போனா மட்டும்தான் நல்ல சாப்பாடு இல்லாட்டி, காஞ்ச புரோட்டாவும், கோழி கால் குழம்பும் தான் கெடச்ச கதி...

மச்சி இதைவிடக் கொடுமை துணி துவைக்கிறதுதாண்டா... நீட்டா உடுத்தும்போது துள்ளுற மனசுதாண்டா, அழுக்கு துணியைப் பார்க்குறப்ப துவைக்கணுமேன்னு துவண்டுபோகுது.
இந்த அழுக்குக்கு பயந்தே லைட் கலர்ல டிரெஸ் எடுக்குறத விட்டுட்டேண்டா. வெள்ளைச் சட்டைன்றது ஊருல படிச்சிட்டிருந்த காலக்கட்டத்தோட முடிஞ்சுபோச்சு. இப்போ பாரு, பேருக்கு கூட வெள்ளைச்சட்டை போட மனசு வரமாட்டங்குது. நல்ல கறுப்பு கலர், பிரவுன் கலருன்னு டார்க் கலரா வாங்கிப் போட்டாத்தான் ஒரு பத்து நாளைக்காவது போட்டுக்க முடியுது....

என்னமோ பேச்சுலரா இருந்தா மட்டுதான் பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறதுங்கிற கஷ்டம் மாதிரி பேசிக்கிறாங்க. டேய் கல்யாணம் பண்ணுறவரைக்கும் உங்க துணியை மட்டும்தான் துவைக்கணும், உங்க பாத்திரத்தை மட்டும்தான் கழுவணும். கல்யாணம் பண்ணீட்டிங்கன்னா மவனே, ......
பேச்சுலர் வாழ்க்கைக்கு ஏங்கியவனாய் காதுமடலைத் தடவியபடி சென்றேன்.

1 கருத்து:

ரமேஷ் வைத்யா சொன்னது…

சின்னதா, சிறப்பா இருக்கு.