வெயிலோடு போராடி
வெயிலோடு வாயாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
சோர்ந்து போனோமே
பஸ் போகும் கார் போகும்
ரோட்டோரம் நாம் போனா
தார் கூட சூடாகித்தான்
செருப்பு அறுந்தோடும்
நிழல் வந்தா ஒதுங்கி நில்லு
தண்ணீன்னா குளுறும் சொல்லு
குடிப்போமே ஜூஸு கேளு...
கேழ்வரகு நல்ல கூழு
கேழ்வரகு நல்ல கூழு!
- வெயிலோடு
ஊரச் சுத்தும் சேல்ஸ்மேன வேல
ரொம்ப ரசிச்சோம்
வெயிலுலதான் சுத்தும்போது
கண்ணீர் வடிச்சோம்
வேற வேல போகலான்னு
நெஞ்சில் நினைச்சோம்
அப்பாவ பார்த்ததும்
இடுப்பு பெல்ட்ட நெனச்சோம்
எப்படியோ கோடையத்தான்
நாம இங்க சமாளிச்சாலும்
அடுத்து வர்ற மழக்காலத்த எங்க சொல்லுவோம்
அப்பவும் மழையிலதான் ஊரச் சுத்த முடியாதுன்னு
பழைய பல்லவியத்தான் நாமும் இன்னு படிப்போம்!
கோடைகாலம் போனாலு மழத்தூறல் விழுந்தாலும்
வேலையைத் தவிர வாழ்க்கையில வேறு எத அறிஞ்சோம்!
-வெயிலோடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக