இதழ் விரித்த சிரிப்பு
இன்னும் மறக்கவில்லை!
கண் பேசும் ஜாடையின் மயக்கம்
எனக்குத் தெளியவில்லை!
தளர் நடையாம் ஊன்றுகோல்
தெரிவிக்க வில்லை
அண்ணனாய் இருந்தவனே!
சிங்'காலன்' வந்தானோ
உயிர் பறிக்க!
பங்கருக்குள்ளும்
பாய்ந்த குண்டு
பயந்தே வெடித்ததோ
உனைக்கண்டு!
ஈழ மண்ணில்
நீ இட்டது
இறுதி முத்தம்!
உலகுள்ளவரை
ஒலிக்கும் அது
தமிழின் சத்தம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக