அந்தாளு ரொம்பப் பெரிய ஆளு. அவரு நெனச்சா, நெனச்சத முடிச்சிருவாரு. உலகத்துல நடக்குற எல்லா நிகழ்வுகளும் அவருக்கு அத்துப்படி. நடந்தது, நடப்பது, நடக்கப்போறது எல்லாமும் தனக்கு தெரியும்னு சொல்லிகிறவரு.
ஆனாலும் என்ன பண்றது அவருக்கும் வயசாயிடுச்சு. அவரு கணிச்சபடி அவரை சாவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நாமதான் ரொம்ப வெவரமானவராச்சே, நம்மள சாவுகொண்டு போகாம தடுக்க ஏதாவது செய்தாகனும்.
இராப்பகலா கண்ணுமுழிச்சி அவரமாதிரியே 6 நடமாடும் பொம்மைகளை செஞ்சாரு. அவரா, பொம்மையான்னு இனம்பிரிச்சி பார்க்க முடியாத மாதிரி இருந்துச்சு.
சாவு வர்ற நாளு அவருக்கு. வலப்பக்கம் மூணு, இடப்பக்கம் மூணு பொம்மைகளை படுக்க வச்சுட்டு, நடுவுல அவரும் படுத்துக்கிட்டாரும்.
உசுர எடுக்கிறவங்களோட சிஷ்யர்கள் வந்தாங்க.
என்னடா இது நமக்கு வந்த சோதனை. இங்க 7 பேரு இருக்கானுங்களே, யாரு அந்த விவரமான ஆளு. எப்படி அவரு உசுர எடுக்குறதுன்னு சிஷ்யர்களுக்கு குழப்பம்.
சரி, இந்தக் குழப்பத்தை நம்ம குருக்கிட்டயே விட்டுறலாம்னு நேரா குருகிட்ட வந்துட்டாங்க.
என்னாச்சு சிஷ்யப்பிள்ளைங்களா, வெறுங்கையோட வந்துருக்கீங்க...
அது வந்து குரு அங்கு ஏழு பேரு இருக்கானுவ. யார தூக்குறதுன்னு தெரியலை.... அதான்.
நல்லதாப் போச்சு அம்புட்டுபயபுள்ளையும் தூக்கிறவேண்டியதுதானே...
குருவே எங்க வேலைக்கு ஆப்பு வைப்பீங்களோன்னு உங்ககிட்ட வந்தா, நீங்க உங்க பதவிக்கே ஆப்பு வச்சிடுவீங்க போலயிருக்கே...
சரி, சரி... நாம் போய் அந்தப் பயலை தூக்கிர்றேன்.
குருவுக்கே தலை சுத்திக்கிச்சு. இந்த ஏழுல யாருடா நாம தூக்க வேண்டியது.
குருவோட மனக்குமுறலும் வெவர பார்ட்டிக்கு கேட்டு அவரு மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டிருக்காரு.
குருவுக்கு மண்டையில பல்பு எரிய... யப்பா, இந்த பயபுள்ளைங்கள எப்படிப்பா, இப்படி நுணுக்கமா படைச்சே. நீ வெரி குட்டுப்பா, சூப்பரப். உன்னை மாதிரி யாராலயும் படைக்க முடியாது. வெரி கிரேட்டுன்னு.... எக்ஸ்ட்ராவா குரு பொழந்து கட்ட...
அதுவரைக்கும் பொத்திக்கிட்டிருந்த அந்த வெவரம், எய் நாந்தாம்டே இதையெல்லாம் செஞ்சேன். அத வுட்டுட்டு யாரையோ ஓவரா பேசுறியடே...ன்னு வெவரம் எகிறிச்சு.
வாடே, மாப்ள நல்ல மாடடிக்கிட்டியான்னு குரு வெவரத்த தூக்கிட்டாரு.
நீதி: எம்மாம் பெரிய கொம்பனா இருந்தாலும் மவனே கடைசியில உனக்கும் பாலுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக